Latest Collections of தமிழ் லவ் எஸ் எம் எஸ் - Tamil Love SMS 💗

காதல் கவிதை


  • அன்பு காதல் கவிதைகள்
  • தமிழ் காதல் கவிதை வரிகள்
  • காதல் கவிதைகள் 2018

தமிழ் காதல் கவிதைகள் sms Collections


எத்தனை துன்பம்
இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும்
அந்த நேரத்தில் மட்டும்...


உன்னைத்தவிர வேறு என்ன
பெரிய வேண்டுதல் இருந்து விட
போகிறது எனக்கு.....


விண்ணில்
விளையாடும்
நிலவைப்போல்
என்னுள் விளையாடுகிறது
உன் நினைவு...


எழுதுகோலின்றி
பல கவிதைகள்
வடிக்கின்றது
உன் விரல்கள்


நிலவுக்கும்
ஒருநாள்
விடுதலையுண்டு
உன்
நினைவுக்கு
ஒருபோதும்
விடுதலையில்லை


பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்


நிகழ்வது உன்
மடியிலென்றால்
ஏற்பேன் மகிழ்வுடனே மரணம்...


உனை
வர்ணிக்கும் போதே
கவிதையும்
கொஞ்சம் வெட்கப்படுகிறது


மனதின்
மையல்களை
மையில் கலந்து
விழியிலொரு
கவிதை
நீ ரசிக்க...


அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை...


வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...


மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை...


உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது...


பலமுறை
முயற்சித்தும்
தோற்றுப்போனேன்
வீணையை மீட்ட....
உன் நினைவுகளென்னை
மீட்டிக்கொண்டிருப்பதால்


மனதுக்குள்
மலர்ந்தாய்
மலராய்....
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை....


விழிகள்
காத்திருப்பதும்
உனக்காக....
கண்ணீரும்
உனக்காக


கடவுளிடம்
வேண்டுதலென்று
எதுவுமில்லை
வரமாக நீ
கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர...


நினைக்க
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை......
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது


என் தேடல்களில்
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே...


உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்...


ஆர்ப்பாட்டங்கள் இல்லாத
உன் அன்பிற்கு
அடிமையானேன் நான்...


மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...


நீயில்லா
நேரங்களில்
உன்
நினைவுகளைத்தவிர
வேறெதற்கும்
அனுமதியில்லை
என்னருகில்......


எதையும் சொந்தமாக்கி கொள்ளும்
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர...


அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்...


தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்....
(மலரும் நினைவுகள்)


தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே தேடுவதற்கு...


எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த....
பூவின் நறுமணத்தை


ஒற்றை
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த....
ஆசைகளையும்


காற்றுக்கும்
கற்றுக்கொடுத்து
விட்டாயா....
கூந்தல்
கலைத்து
விளையாட


உன்னருகில்
மௌனம்
பேரழகு...


நீயில்லா இடம்
எப்போதும்
வெறுமையே
நீ வந்து
நிரப்பும் வரை


காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்


உன்னை புரிந்துக்கொண்ட
போதுதான் என்னுள்
உள்ள பிழைகளை உணர்ந்தேன்...


யாருக்காகவும் என்
வாழ்க்கையில்லையென்ற
எண்ணத்தை மாற்றி
உனக்காகவே என்
வாழ்க்கையென்று
காத்திருக்க வைத்துவிட்டாய்


தொலைத்தூரத்தில்
நானிருந்தாலும்
ஒருநொடி
போதும் எனக்கு
உன்....
நினைவுகளைத்தொட


பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்....
மாயக் கண்ணனாய்


உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை....


உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....


என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது...


உன் மனதில்
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்...


என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு


உன் நினைவில்
என் இரவும்
நீள்கிறது...


என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு


சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...


துடிக்கும்
இதயமும்
உன்
பெயரைச்சொல்லியே
குதிக்கின்றது...


என்னோடு காத்திருந்து
நிலவும் தேய்ந்துப்போகிறது
உன்னை காணாது...


தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை...


நிலவை அழகாக்கும்
இரவைப்போல்
மனதை அழகாக்குகிறது
உன் நினைவு...


நிழலும்
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற....


சிறகிருந்தும்
சிறைபட்டிருக்கின்றேன்
உன் மனக்கூண்டில்...


இதமாக
வருடி செல்கிறது
உன் நினைவுகள்...
உனை
நினைக்கும்
போதெல்லாம்...
(இனிமையாக)


தொடர்வதை
நிறுத்திவிடாதே
களைத்துவிடுமென்
பயணம்....


என்னை மறந்துவிடு
என்றவன் தன்னைமறந்து
விட்டுச்சென்றான் மனதை...


இரவில் வரும்
கனவைவிட உன்
நினைவில் வரும்
கனவிலேயே நான்
நிஜமாய் வாழ்கின்றேன்


உன் நினைவு
என்னைத்தீண்ட
பூக்களும்
நாணம் கொண்டு
தலைசாய்கிறது...


மழையென கொள்கிறேன்
உனை முழுமையாய்...
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்...
புரிதல்களால்


உனக்காக
எழுதும் வரிகளை
மனதுக்கே அஞ்சல்
செய்துகொள்கின்றேன்
வேறுயாரும்
ரசித்திட கூடாதென்று...


உனக்காகவேயென்
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே...


நீங்காமல்
நீயிருந்தால்
என் ஆயுளும்
நிலைத்திடுமே...


தொடும் தூர நிலவும்
நெடுந்தூரமானது
ரசிக்க நீயின்றி...


கடிகாரத்தினுள்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்


நானும் ஓர்
சிலைதான்
உன்
நினைவுகள்
உரசிசெல்கையில்


உன்னில்
கரைந்த
நிமிடங்கள்
நான்
ரசித்த
தருணங்கள்


நீ தோளில்
சாயும் நேரம்
என் சுமைகளும்
சுகமாய் மாறும்


நீ ரசிக்க
விழிகளில்
சிறு கோலம்...


கோடையும்
மார்கழியே
உன்னருகில்


உன் வருகையில்
என் உலகமும்
அழகு...


உன் வெட்கம்
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க...


அத்தனை
இரைச்சலயும்
நிசப்தமாக்கி
உன் நினைவு
என்னை
தனிமையாக்கிவிடுகிறது


தொலைத்தூரத்தில்
இருந்தாலும்
அழகாகவே
காட்சி தரும்
நிலவைப்போல்
உன் நினைவும் அழகே


என்னைக்காண
காத்திருக்கும்
உன்
விழிகளுக்கு
விருந்தளிக்க
என்விழிகள்
பார்த்துக்கொள்கிறது
பலமுறை ஒத்திகை


தொலைவாய்
என தோன்றவில்லை...!!
தேடுதலில்
என் எண்ணமில்லை...!!
விலகியும்
நீடிக்கிறாய் என்னருகில்...!!
(பிரியாத - வரமாக)


அனுவளவு
விலகினாலும்
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே
உயிர்


வானவில்லாய் நீ
வந்தாய்
வண்ணமானது
வாழ்க்கை


மறுமலர்ச்சியாய்
மலரும் நினைவுகள்...
மதி மயங்கியே
போகிறேன்...
மயக்கிய
வார்த்தைகளால்...
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்...
அன்புக்கு அடிமையாய்...


தோளில் சாயும்
நேரம் இவன்
விழிகளும்
கவிதை பேசும்...


மையில்
கிறுக்கப்படாத
பல கவிதைகள்
விழியில்
மையிட்டு
மையலோடு
காத்திருக்கு
நீ படிக்க...


உன் கொஞ்சும்
மொழிகேட்டு
கூந்தலுக்கும்
நாணம் வர
நெளிந்து
வளைகிறது...


சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட...


போர்வைக்கு
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது...


நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது...


கடந்து
போகும்போதெல்லாம்
காதலை கலந்தே
போகின்றாய்
கண்களில்...


இமை கதவுகள்
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக...


உன்
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது...


என்னிதயம்
துடிக்க
உன் நினைவு
போதும்...


சிறகடித்து
பறந்த நான்
சிறைபட்டுப்போனேன்
உன் நினைவில்


தேய்பிறையாய்
நானிருந்தேன்
வள்ர்பிறையாய்
என் வாழ்வில்
வந்தாய்...


மனதுக்கும்
மறதியுண்டாம்
அதை தினமும்
பொய்யாக்குகிறது
உன் நினைவு...


உன் கரங்கள்
குடையாக நனைந்தேன்
நானும் காதல் மழையில்


உன் காயத்துக்கு
மருந்து நான்
என் கண்ணீர்
துடைக்கும்
விரல்கள் நீ