Here we Publish the Selected Tamil Song Lyrics only (மனதை தொட்ட தமிழ் பாடல் வரிகள்).

  • Tamil Paadal Varigal Collections in Tamil for your Social Status, Stories and reels.

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்

🎵 🎧 🎶

தமிழ் பாடல் வரிகள்


Song Lyrics List

  1. Yedho Ondru
  2. Ninaivugal Nenjinil
  3. Kaathalae Kaathalae
  4. O Manamae O Manamae
  5. Solli Vidu Velli Nilave
  6. Innum Enna Thozha
  7. Jilendru Oru Kalavaram

Yedho Ondru From Paiyaa


ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஓ..


Ninaivugal Nenjinil Pudhainthathinaal from Autograph


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை


Kaathalae Kaathalae Song Lyrics (காதலே காதலே) from 96


ஆ...
கொஞ்சும் பூரணமே
வா...
நீ
கொஞ்சும் எழிளிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்
காதலடி
காதலே காதலே
தனி பெருந்துனையே
கூடவா கூடவா
போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா
நீ...


O Manamae O Manamae Song Lyrics (ஓ மனமே ஓ மனமே) from Ullam Ketkumae


ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே


Solli Vidu Velli Nilave (சொல்லிவிடு வெள்ளி நிலவே) From Amaidhi Padai


சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை ஓ வேதனை தீரவில்லை

தொட்ட குறையாவும் விட்ட குறையாகும் வேண்டாம் காதல் ஓ
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏனோ கூடல்
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ எனை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா


Innum Enna Thozha (இன்னும் என்ன தோழா) From 7aam Arivu


இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே

வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக எழுக

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா

ஒரே மனம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே திடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே

வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக எழுக


Jilendru Oru Kalavaram


ஹே
ஜில்லென்று
ஒரு கலவரம்
ஹே ஹே
நெஞ்சுக்குள்
இந்த நிலவரம்
ஹே ஹே
பெண்ணென்ற
ஒரு புயல் வரும் நேரம்

ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல்
ஒரு புறம் என்னில் மோதல்
தரும் சுகம் ஆரம்பம்

தூறலின் சாரலில்
நான் நின்ற போது வானவில்
ஓவியம் நான் கண்டதுண்டு
உன் கண்கள் தரும் வண்ணங்களில்
என்னுள் எழும் எண்ணங்களில்
நான் உறைந்து போனேன் இன்று ஆ

ஹே
ஜில்லென்று
ஒரு கலவரம்
ஹே ஹே
நெஞ்சுக்குள்
இந்த நிலவரம்
ஹே ஹே
பெண்ணென்ற
ஒரு புயல் வரும் நேரம்

ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல்
ஒரு புறம் என்னில் மோதல்
தரும் சுகம் ஆரம்பம்

சாலையில்
டிராபிக்கில் நான் வாடும்
போது எஃப் எம் இல்
பாடல்கள் தான் கேட்பதுண்டு

நான் உன்னை
கண்டபின் என்னுள்
எழும் புதுப்பாடல்கள்
ஓா் ஆயிரம் எனை மறந்து
நின்றேன் இன்று ஆ

ஹே
ஜில்லென்று
ஒரு கலவரம்
ஹே ஹே
நெஞ்சுக்குள்
இந்த நிலவரம்
ஹே ஹே
பெண்ணென்ற
ஒரு புயல் வரும் நேரம்

ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல்
ஒரு புறம் என்னில் மோதல்
தரும் சுகம் ஆரம்பம்

உன்னை நான்
பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம்
வெடித்ததே உயிர் மூச்சில்
அமைதி பூத்ததே ஏன் ஏன்
ஏன் ஏன்

என் கண்ணில்
கோடி சூரியன் என்
வானில் கோடை
கார்முகில் என் நெஞ்சில்
வீசும் தென்றல் ஆனாய்
ஏன் ஆ

ஹே ஹே
ஜில்லென்று
ஒரு கலவரம்
ஹே ஹே
நெஞ்சுக்குள்
இந்த நிலவரம்
ஹே ஹே
பெண்ணென்ற
ஒரு புயல் வரும் நேரம்

ஹே ஹே
காதல் ஒரு புறம்
கண்ணாலே காய்ச்சல்
ஒரு புறம் என்னில் மோதல்
தரும் சுகம் ஆரம்பம்
ஹே ஹே ஹே ஹே


Disclaimer

All song Lyrics Credit goes to Respective Lyrics Writers and Owners.


எங்க போறீங்க இதோ உங்களுக்காக