Whatsapp Status 💬


Here are the Latest Collections of Whatsapp Status in Tamil Language.

Tamil SMS, Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font.

Tamil Whatsapp Status

Tamil Status

👇👇👇👇👇


சந்தோசம் என்பது
மற்றவர்கள் முன்
சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும் போதும்
அழாமல் இருப்பதே...!


உன்னுடைய நிகழ்காலம்
சிறப்பாக இருந்தால்
உன்னுடைய மோசமான
கடந்தகாலத்தை பற்றித்தான்
இந்த உலகமே
விவாதித்துக்கொண்டு இருக்கும்...!


விழும் வேகத்தைவிட
எழும்வேகம் அதிகமாய் இருத்தால்
தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்...!


உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்தபாதை எத்தனை
கடுமையானது என்று...!


அதிகபடியான
வேண்டுதல்
என்னயிருக்க போகிறது
நமக்கொரு
நல்வழியை காட்டு
என்பதை தவிர


எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு...!


அன்று ஜாமன்றிபாக்ஸை
திறக்க சிரமபட்ட
அப்பாக்களின் பிள்ளைகள்
இன்று சுலபமாக
செல்போனின் பேட்டர்ன்லாக்கை
திறந்து விடுகிறார்கள்...!


எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு...!


தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால் கிடைப்பதேவெற்றி


தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட வார்த்தையே இல்லை


நம்மை பற்றி
ஒவ்வொருவருக்கும் தனியான
பார்வை உண்டு
ஆதலால் பிறரிடம்
எமது பிம்பத்தை
அழகாக்கிக்காட்ட
சிரம்ப்பட தேவையில்லை


ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி...!


நம் சிரிப்பில்
மறைந்த வலிகளை
கண்டறிய முடிந்தவர்கள்
தான் நம்சிறந்த
உறவுகளாக இருக்க முடியும்...!


நோக்கம் சரியாஇருந்து
கொஞ்சம்முயற்சி
இருந்தா போதும்
வாழ்க்கை ஜம்முன்னு
இருக்கும்...!


வாழ்க்கையின்
இன்னொரு பகுதியை
காட்டியது தனிமை
அப்போ சிந்தித்து பார்க்கும்
போது தான் புரிந்தது
என் வாழ்க்கையின் நிலைபாடு


எனக்கு எல்லாம் தெரியும்
என்பவனை விட
என்னால் முடியும்
என்பவனே மேலானவன்...!


எவ்வளவு நாளுக்கு
பின் பேசினாலும்
முன்பிருந்த அதே
பாசமும் நேசமும்
மாறாமல் பழகும்
நட்புகளே
நமக்கு கிடைத்த
வரங்கள்...!


காதல்
நேசிக்கபடுவதும்
வெறுக்கபடுவதும்
அவரவரின் அனுபவத்தை
பொறுத்தே...!


நீ ஒதுக்கப்படும் இடங்களில்
நிமிர்ந்து நில்
நீ புகழப்படும் இடங்களில்
அடக்கமாய் நில்
நீ விமர்சிக்கப்படும் இடங்களில்
மௌனமாய் இரு
நீ நேசிக்கப்படும் இடங்களில்
அன்புடன் இரு


பசிக்கு
கூழோ கஞ்சோ
போதும்
ருசிக்கு முடிவேயில்லை
(கேட்டதில் பிடித்தது)


நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கிறது என்பதை விட
எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதே முக்கியம்...!


பாதை எப்படி போகின்றது
என பார்க்காதீர்கள்
போகிறபாதை சரியானதா
என பாருங்கள் போகும்
இடத்தை அடைந்திடலாம்...!


காலம் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
ஆனால்
உன்னை நேசிக்கும்
உண்மையான இதயம்
நிச்சயம் உனக்காக
காத்திருக்கும் என்றும்


கிடைக்குமா என கேட்காதே
கிடைக்கும் என நம்பு
நடக்குமா என கேட்காதே
நடக்கும் என நம்பு
முடியுமா என கேட்காதே
முடியும் என நம்பு


தயங்கி
நிற்காதே
தன்னடக்கம் கூட
தவறாக தெரியும்
சிலரின் கண்களுக்கு


பணம் கொடுக்காத
மகிழ்வை
பாசம் கொடுக்கின்றது
(சிலநேரங்களில்)


வாழ்க்கை
மகிழ்ச்சியாக நகரும்
என்ற நம்பிக்கை
இருக்கும் நிலையில்
பணம் ஆம் பணத்தேவை
இந்த சூழல் சிலசமயம்
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை
இழக்கவைக்கின்றது


நம்மை வெறுப்பதற்க்கும்
ஆளுங்க வேணும்
அப்போ தான்
நல்லா வாழ்றதுக்கான
வைராக்கியம் இருக்கும்


சொத்து இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
சொந்த உழைப்பு இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
நிறையா வித்தியாசம்
உண்டு...!


நாம் அழிவதை
பலர் வரவேற்றாலும்
நம் முன்னேற்றத்தை
விரும்பும் சில
உண்மையான நல் உள்ளங்களை
வாழ்வில் சம்பாதித்து
வைத்துக் கொள்ள வேண்டும்
சில உண்மை உறவின் தேடல்


சந்தர்ப்பமும்
சூழ்நிலைகள்
மட்டுமே
மனிதனின் குணத்தை
எடுத்துக்காட்டும் கண்ணாடி


நாளை
இந்நேரம் வரும்
ஆனால் போனது
போனது தான்


வேடம் போட்டால் நல்லவன்
காசு இருந்தால் கடவுள்
உண்மை பேசினால் பைத்தியக்காரன்
அன்பு காட்டினால் ஏமாளி
எடுத்து சொன்னால் கோமாளி
நவீன உலகில் மாறி
வரும் மாற்றங்கள்...!


இரக்கப்படுபவன்
ஏமாந்து போகலாம்
ஆனால்
தாழ்ந்து போவதில்லை
ஏமாற்றுபவர்கள்
வெற்றி பெறலாம்
ஆனால்
கடைசிவரை சாதிக்க போவதில்லை


பாவங்களுக்கு
எப்படியோ
மன்னிப்பு கிடைத்துவிடுகின்றது
நியாயங்கள்
தான் நிலுவையில்
நின்றுக் கொண்டிருக்கின்றன


தானாக உயரும்
வயது
விடாமல் துரத்தும்
காலம்
தடுக்க முடியாத
நேரம்
கடக்கத் துடிக்கும்
இளமை
காலைத் தடுக்கும்
சமூகம்
தொட வேண்டிய
இலக்கு
இத்தனை போராட்டம்
தான் வாழ்க்கை


எதிரியை ஜெயிக்கணும்னு
முடிவு செய்துவிட்டால்
நீ ஏந்த வேண்டிய
ஒற்றை ஆயுதம்
புன்னகை மட்டுமே
எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும்
எப்போதும் சந்தோஷமாய்
இருக்கிறானே என்கிற
நினைவே அவனை
கொன்றுவிடும்
(மகிழ்ந்திரு)


சிலரின் விருப்பங்கள்
வெளிப்படையானவை
எளிதாக அனைவருக்கும்
தெரிந்துவிடும்
சிலரின் விருப்பங்கள்
மறைமுகமானவை
அவ்வளவு எளிதில்
யாருக்கும் தெரியாது


கவலைகள்
வந்து கொண்டு தான் இருக்கும்
அதனை நிரந்தரமாக்குவதும்
தற்காலிகமாக்குவதும்
நம்மிடம் தான் உள்ளது
நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி
தற்காலிகமாக்கினால்
நீ புத்திசாலி


நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்


சில விஷயம்
புரிந்தால் தான் பிடிக்கும்
சில விஷயம்
பிடித்தால் தான் புரியும்


அதிகமாக சிரிக்கும்
ஒவ்வொரு மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய
காயத்தை வைத்திருப்பான்
எனவே மனதில்
எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும்
சிரித்து பழகுங்கள்
காயங்கள் காணாமற் போகட்டும்


உன் சந்தோசம்
உன்னை வாழ்க்கையின்
மீதான அன்பை
பெற வைக்கும்
உன் கவலை
வாழ்க்கையின் மீதான
நம்பிக்கையை
இழக்க வைக்கும்


ஒருவன்
தன் நிலையிலிருந்து
உயர்ந்தால்
அவன் தன் உறவுகளை
மறந்து விடுகிறான்
அதே ஒருவன்
தன் நிலையில்
இருந்து வீழ்ந்தால்
அவனை அவனது
உறவுகள் மறந்து
விடுகின்றனர்


வரம்பு மீறிய
வலியை கொடுப்பவர்கள்
முன்னே ஒருபோதும்
கதறி அழுதுவிடாதே
கலகலவென சிரித்துக்கொண்டே
அங்கிருந்து நகர்ந்துவிடு
குழம்பிப்போகட்டும்


உன்னை வலுப்படுத்த
தெரிந்தவர்களிடம் மட்டும
உங்கள் குறைகளை சொல்லுங்கள்
உன்னை பின்பற்றி
வருபவர்களிடம் மட்டும்
வழியை சொல்லுங்கள்
நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்
அன்பை சொல்லுங்கள்
ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்
தூரத்தை சொல்லுங்கள்


சிறிய செயல்களில் கூட
உண்மையாய் இருங்கள்
ஏனெனில் அதில் தான்
நம்பலமே அடங்கியிருக்கிறது


எனது தேவை
என்பது அவசியம்
எனக்கு மட்டுமே
தேவையென்பது சுயநலம்
இன்னும் தேவையென்பது
பேராசை
எதுவும் தேவையில்லை
என்பதே மனிதாபிமானம்


எவ்வளவு தான்
பெரியவெற்றி அடைந்தாலும்
சிறு வயதில் கிடைத்த
சந்தோசத்திற்கு ஈடுகட்டியதில்லை


நாணயத்தின்
இரு பக்கங்கள்
போன்றது வாழ்க்கை
மென்மையாகப்
பேசும்போது இனிமையாகவும்
வன்மையாகப்
பேசும் போது
கசப்பாகவும் இருக்கும்
புரிந்து கொண்டால்
வாழ்க்கை உன்கையில்
வளமே உன் வாழ்க்கையில்


வாழ்க்கையில்
ஒன்றை விட
இன்னொன்று சிறந்தது
என்று எண்ணுவதை விட
ஒவ்வொன்றுக்கும்
ஒரு தனித்துவம் இருக்கும்
என்று புரிந்து கொண்டு
இயல்பாக ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கை சிறக்கும்


வார்த்தைகளை சிதறவிடாதே
பிறகு
நீ வள்ளுவராகவே
ஆனாலும்
யாரும் உன்னை
கவனிக்க மாட்டார்கள்


தோல்வி ஏற்ப்படின்
தோற்று விட்டோமே
என்று எண்ணாதே
நீ ஒரு நாள்
வென்று விடுவாய்
ஆனால் நேரத்தை
வீணாக்காதே
அது உன் தோல்வியை
பல மடங்கு
அதிகரித்து விடும்


வறுமை இல்லாமல்
வாழ வேண்டும்
என்று கடவுளை
வேண்டுவதை விட
வறுமையைக் கொடுத்தாலும்
அதனை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கக் கூடிய திறமையையும்
கொடு என்று
வேண்டுவதே சிறந்தது


எப்பவும்
எந்த சூழ்நிலையிலும்
என்ன நடந்தாலும்
நாம நாமளாவே
மாறாம
உறுதியா இருக்கனும்


யாரையும்
சார்ந்து வாழாதே
உன் சுயத்தை
தொலைத்திடுவாய்
சுயமாய் வாழப்பழகு
உன்னையே நீ நேசிப்பாய்


ரொம்ப சிந்திச்சா
மனசு வலிக்கும்
அப்புறம்
தலை வலிக்கும்
வாழ்க்கையையும்
மனுஷங்களையும்
அவங்க அவங்க
போக்கிலேயே விட்டுறணும்
அதான் நமக்கு நல்லது


சிரிக்க
கற்றுக் கொள்ளுங்கள்
நமது கவலைகளை
அடுத்தவரிடம் மறைப்பதற்கு


எழுதிய "மை"யில்
உண்"மை"யும்
வரைந்த "மை"யில்
உயிர்"மை"யும்
கறந்த பாலின்
தூய்"மை"யும்
இருக்க வேண்டும்


உங்களை மதிக்காதவர்களிடம்
நீங்கள் மதித்து பேசும்
சில வினாடிகள்
கூட வீணானதுதான்


நான் நானாக
இதுவரை யாருக்காகவும்
என்னை மாற்றிக்கொள்ளவில்லை
எனக்காக யாரையும்
மாற சொன்னதுமில்லை


புதியதை நினைப்போம்
சந்தோஷங்களை பகிர்வோம்
எதிரியை மன்னிப்போம்
அனைவரையும் நேசிப்போம்
எப்போதும் நம் வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருக்கும்


சில நேரங்களில்
புன்னகைக்கு அர்த்தம்
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
என்று அர்த்தம் இல்லை
ஏமாற்றங்களை
தாங்கிக் கொண்டும்
வலிமையாக இருக்கிறேன்
என்று பொருள்


குழந்தைகளின் புன்சிரிப்புக்கு
மதி மயங்காது
யாருமே இருக்க
வாய்ப்பு இல்லை
(அழகு)


என்னைப் பிடிச்சிருக்கானு
நாம் கேட்பதை விட
உங்களைப் பிடிச்சிருக்குன்னு
மத்தவங்க சொல்லணும்
அதுவே நம் வெற்றி


உன்னை
தெரிந்து கொள்
ஊரை
புரிந்து கொள்
யார் தேவை
என தெரிந்து
கொள்ளலாம்


துரோகியை
உற்றுப்பார்த்தால் உன்பழைய
உயிர்நண்பன்
கண்ணில் தெரிவான்
எதிரியை
உற்றுப்பார்த்தால் உன்எதிர்கால
வழிகாட்டி
கண்ணில் தெரிவான்


தொலைவுகளால்
தொலைந்தவர்களை
இணைத்து விட்டு
அருகில் இருப்போரை
தொலைதூரமாக்குவது தான்
இணையத்தின் இயல்போ


நம் கடந்த காலத்தை
திரும்பி பார்க்கும் போது
இவ்வளவு கிறுக்குதனமாவா
இருந்தோம்னு தோணுது


ஒரு முட்டாள்
தன்னுடன் வாழ முடியாமல்
விட்டுப் போனவர்களை
நினைத்து வருத்தப் படுவான்
ஒரு புத்திசாலி
தன்னை விட்டுப் போனவர்கள்
வருத்தப்படும் படி
வாழ்ந்து காட்டுவான்


நீ யார் என்பதை
உன் செயல் தான்
சொல்லனுமே தவிர
அடுத்தவன்
சொல்லக்கூடாது


நம்முடைய புன்னகை
நம்மை மட்டுமல்லாமல்
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும்
உற்சாகத்தை கொடுக்க வேண்டும்


மணம் வீசும் மலர்கள்
மாலைக்கு அழகு.
நல்ல மனம் கொண்ட மனிதர்கள்
வாழ்க்கைக்கு அழகு


வழிகாட்டியாய் யாரையும்
நம்பி பயணித்தல் சிறப்பு
வழித்துணையாய் யாரையுமே
நம்பி பயணித்தல் சிறப்பல்ல


நிதானம்
தவறும் போதெல்லாம்
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்
வார்த்தைகள் கூர்மையானது
நம்மை எப்போதும்
சிதைக்கக் கூடும்


சிலர் நமக்கு
மனவலிமை தருகிறார்கள்
சிலர் நமக்கு
மனவலியை தருகிறார்கள்
மனவலிமையோடு மனவலியை
கடந்து செல்வோம்


நாம் என்ன செய்கின்றோம்
என்பதை அறிந்து
செய்தாலே பாேதும்
தாேல்வி நம்மை விட்டு
சற்று விலகியே இருக்கும்


ஹிட்லர் வாழ்க்கையும்
வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும்
வேண்டாம்
அவரவர்க்கு உண்டான
வாழ்க்கை வாழ்ந்தால் போதும்
உலகம் அழகாய் தெரியும்


போலியான
உபசரிப்புகளை விட
உண்மையான
திமிர் அழகானது
பெருந்தன்மையாக
நடிப்பதை விட
இயல்பான அகம்பாவம் மேலானது


முட்டாள்கள் பேசியே
தங்களை காட்டிக் கொடுக்கிறார்கள்
அறிவாளிகள்
மௌனமாக இருந்தே
முட்டாள்களை கண்டுபிடிக்கிறார்கள்


வெற்றிடம் வெகு சுலபமாக
நிரப்பப் படுகிறது
உறவுகளில் வெற்றிடத்தை
உண்டாக்காதீர்கள்
உங்கள் இடத்தை பறிகொடுத்து
விடாதீர்கள்


ஒரு குறையும் இல்லை
எப்பொழுதும்
மகிழ்வுடன் இருப்பாய்
என்ற நம்பிக்கை
தரும் சொற்கள்
தரும் உற்சாகங்கள்
பேரழகானவை


இப்பூவுலகில் உள்ள
பூக்களும் பொறாமை
கொள்ளட்டும்
நம் புன்னகையைக் கண்டு
புன்னகைப்போம் பூக்களுக்கும்
ஓய்வு கொடுப்போம்


எதிர்காலத்தை பற்றி
கவலைபடாதீர்கள்
எவ்வளவு கவலைபட்டாலும்
நடப்பது தானாக நடந்து
கொண்டு தான் இருக்கும்


விடையில்லாத கேள்விகளும்
தீர்வில்லாத பிரச்சினைகளும்
எல்லோர் வாழ்விலும் உண்டு
புன்னகைத்துக் கொண்டே
கடந்து செல்வதில் தான்
சாமர்த்தியம் இருக்கிறது


தேவைக்காக அன்பு
காட்டுறவங்களையும்
தேவ வரும் போது
மட்டும் அன்பு காட்டுறவங்களையும்
கூடவே வச்சுக்கக்கூடாது


இலக்கு சரியாக இருந்தால்
வழி தானாக பிறக்கும்.
எண்ணங்கள் சீராக இருந்தால்
செயல்கள் வெற்றிகரமாக முடியும்


புன்னகைக்கு அளவும் இல்லை
வயது வரம்பும் இல்லை
புன்னகை செய்வோம்
எதிரிகள் நம்மை கடக்கும் போதும்
யாரும் நம்மை
எதிரியாக நினைக்காமல் இருக்கவும்


உங்களின்
வசதியோ
பணமோ
அழகோ
உங்களை உயர்த்துவதில்லை
உங்களின் நற்செயலே
உங்களை உயர்த்தி காட்டும்
நல்லதையே சிந்திப்பீர்
நல்லதையே செய்வீர்


போராடும் மனங்கள்
விடியலில் போர்வைக்குள்
ஒளிந்திருப்பதில்லை
புது விடியலை
புதுப்பிக்க காத்திருக்கும்
புன்னகையுடன்
இன்றைய நாளை
தொடங்குவோம்


பிடித்து பழகுபவர்களை விட
பொழுது போக்காய்
நினைத்து
நடித்து பழகுபவர்களே
இங்கு அதிகம்


மற்றவர்களுக்கு ஏற்றவாறு
உன்னை மாற்றிக்கொள்ளாதே
கடைசி வரை
நீ நீயாக இரு


நம் வெற்றி
நம்மேல் பொறாமை உள்ளவர்களை
ஆத்திரப்படுத்தும்
நம்மை தாழ்வாக நினைத்தவர்களை
ஆச்சரியப்படுத்தும்
நம் மீது உண்மையான
அன்புள்ளவர்களை
ஆனந்தப்படுத்தும்


பிடிக்குதோ
பிடிக்கலயோ
ஒவ்வொரு நாளையும்
புன்னகையோடு கடந்து
வருவோம்


நிகழ் காலத்திற்கு இலையாக
இறந்த காலத்திற்கு சருகாக
எதிர்காலத்திற்கு உரமாக
முக்காலத்திற்கும்
பொருந்துகிறது ஓர் இலை


மறந்து விட்டேன்
நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும்
சமாதானம்


சந்தோசத்தில்
கை குலுக்கும்
ஐந்து விரல்களை விட
கஷ்டத்தில்
கண் துடைக்கும்
ஒரு விரலே மேலானது


ரசிக்கும் பார்வையை
பொறுத்தே
வாழ்க்கை அழகாகவும்
அர்த்தமாகவும் ஆகிறது
வாழும் வாழ்க்கையை
ரசித்து வாழ்வோம்
வாழ்த்துக்கள் உறவுகளே


நேற்று நேரமே
கிடைக்கலை என்றோம்
இன்று நேரத்தை
கடத்த வழி
தேடி கொண்டு
இருக்கிறோம்


கிடைக்காமல்
போன இன்பத்தை விட
தேடாமல் விட்ட
இன்பங்களே அதிகம்


ஏதோ ஒன்றை
கற்றுக் கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் மட்டும்
இருந்தால் போதும்
அந்த விஷயம்
வெகு சுலபமாக
உங்களால்
கற்றுக் கொள்ள முடியும்
அதில் சிறப்பானவராக
திகழவும் வாய்ப்பு அமையும்


நாம் காத்திருப்பது
தெரிந்தும்
அடுத்தவர்களுக்கு
முக்கியத்துவம்
கொடுப்பதெல்லாம்
அவர்களுக்கே
உள்ள அலட்சிய குணம்


பணிவு என்பது
ஒருபோதும்
பலவீனம் அல்ல
பணிவு மிக பெரிய பலம்
ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்
பணிவுடன் இருப்பவர்
கோழை அல்ல


கடந்து செல்ல
கற்றுக்கொள்
உன்னை
குறை கூறுபவர்கள்
யாவரும்
உத்தமர் இல்லை என்பதை
நினைவில் வைத்து


அனுபவசாலி என்பவர்கள்
வயதை கடந்து வருபவர்கள்
அல்ல
வலியை கடந்து வருபவர்கள்


வாழ்க்கையில
பின்னாடியும் போகாமல்
முன்னாடியும்
போக முடியாமல்
இதற்க்கு இடையில்
நிக்குறதுக்கு
பெயர் தான் வாழ்க்கையோ


எப்பவுமே
நம்ம சந்தோஷமா
இருக்க முடியாது
ஆனா நம்ம கூட
இருக்கவங்களையும்
நம்மள நம்பி இருக்கவங்களையும்
முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா
வச்சிருக்க முடியும்
அதுவே நமக்கு அளவான
சந்தோஷத்தை தரும்


குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்


மௌனத்தை செவி
தாழ்த்தி அமைதியாக கேள்
வார்த்தைகள் சொல்லாததை
அது அதிகமாகவே சொல்லும்


வெறும்
பெருமைக்காக மட்டும்
எதையும் செய்யாதீர்கள்
உங்கள் மன திருப்திக்காகவும்
மன நிறைவுக்காகவும் செய்யுங்கள்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக