காதலர் தினம் கவிதைகள் 2024 Special - Latest Collections of Valentine's day Tamil Kavithaigal, Quotes and SMS in Tamil.

காதலர் தின சிறப்பு கவிதைகள்

  • Valentine's Day Wishes in Tamil
  • kadhalar thina kavithaigal
  • Lovers Day wishes in Tamil
  • Kadhalar thina kavithai
  • Love Calculator
  • Valentine's Day Greeting images with Name

Tamil Love SMS and Quotes Collections - Valentines day Tamil Kavithai

ID Post
1 Whatsapp Tamil Love Status
2 Tamil Love Kavithai SMS
3 தமிழ் காதல் கவிதைகள் 2023
4 தமிழ் லவ் எஸ் எம் எஸ்
5 லவ் Quotes

Tamil Lovers Day Kavithai

👇👇👇👇👇👇


வம்பான
பார்வையை
அம்பாக
எய்கின்றாய்


நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை
கேட்காத நொடிகள் இல்லை
கேட்கிறேன் இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம்
துடிப்பது உனக்காக அல்லவா


மனமும்
மகிழ்வில்
உன் விழிகளில்
என்னை காண்பதால்


என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே...
உன் உலகமென்று


கொஞ்சும்
மொழியில்
கெஞ்சும்
உன் வார்த்தைகளில்
என் கோபங்களும்
மறைந்து விடுகிறது


மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!


மனதிலிருக்கும்
ஆசைகளையெல்லாம்
கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனான்
குழந்தையாய்...!


காற்றோடு
பேசும் மலராய்
உன் மனதோடு
பேசி கொண்டிருக்கின்றேன்
நான்...!


நான்
மறைந்தாலும்
உன் மனதில்
மறக்கப்படாதளவுக்கோர்
அழகிய வாழ்க்கையை
வாழ்ந்திட வேண்டும்


பார்க்க
மறுத்த விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
தொலைந்து...!


இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்...!


விடைப்பெறட்டும்
நாணம்
விடைத்தருகிறேன்
நானும்
உன் பார்வையின்
கேள்விக்கு


உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ...!


உன் சிறுத்துளி
நினைவு போதுமென்
அகம் முகம் மகிழ...!


உதிர்ந்திடுமுன்
கொய்தெறிந்துவிட்ட
மலருக்காக
கண்ணீர் வடிக்கின்றது
வானம்...!


தூரம் வலியை
கொடுத்தாலும் சுகமே
நினைவுகள்
உன்னை சுற்றியே
சுழன்று கொண்டிருப்பதால்


நினைவு கடலில்
நீந்துகின்றேன்
கரை சேர்த்திட
வருவாயென...!


நம்மை
நனைத்த மழைதுளி
உலர்ந்தபோதும்
நாம் இணைந்த
நினைவுதுளி
இன்னும் ஈரமாகவே
மனதில்...!


என்னால்
நீ அனுபவித்த
காயங்களையெல்லாம்
ஆற்றிடவேண்டும்
அன்பில்...!


தித்திக்கும்
உன் நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது
என் கனவுகள்
நீயாக இருக்கும் வரை
என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்
அது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை...!
(யாவும் கற்பனை)


வரிகளில்
இல்லாத ரசனை
உன்னிரு விழிகளில்
உணர்ந்தேன்...!


நீ விடைபெறும்
போதெல்லாம்
என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய்
உன் நினைவுகள்...!


சுதந்திரமான மனதும்
சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே
எனக்குமட்டும்
சொந்தமென்று


மாட்டிய கொலுசில்
மனசையும் கோர்த்து
விட்டாயா
ஒலிக்குமிசையில்
உன்பெயர் கேட்குதே


உறங்காத கண்களும்
உறங்கிப்போனது
உன் நெஞ்சமெனும்
பஞ்சணையில்


உளிகொண்டு
பார்வையில்
செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன்
நானும்


காதலின்
வெளிபாடுதான்
முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம்
முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி


கண்களில் தொடங்கி
கட்டிலறையில்
முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து
மணவறை சென்று
மரணம்வரை
உடனிருப்பதே
உண்மை காதல்


உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே


எந்த தினம்
என்றாலும் அனுதினமும்
அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்...!


அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா
அப்பாவை விட்டுகொடுக்காத அம்மா
இவர்களைவிடவா சிறந்த காதல்ஜோடி
இவ்வுலகிலிருக்க போகிறார்கள்


சத்தமின்றி
யுத்தம் செய்யும்
உன் பார்வையில்
ரத்தமின்றி
போர்க்களமானது
மனம்...!


ஒட்டி
கொண்டிருக்கும்
தாடிக்குள்
சிக்கி கொள்கிறது
மனம் தினம்


உறங்காத
விழிகளுக்குள்
மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய்
இதமாய்


துன்பக் கடலில்
தத்தளித்தபோது
அலைபோல்
வந்தென்னை
கரைசேர்த்தாய்


சுட்டெரிக்கும்
வெயிலிலும்
மழைசாரலாய்
நீயென்னை
கடக்கயில்
இதயமும்
நனையுதே


என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ


ஜன்னலை
பூட்டியபின்னும்
காட்சியை
ரசிக்க தவறாத
விழிகளைபோல்
மனதை பூட்டியபின்னும்
உன் நினைவுகளை
நினைக்க தவறியதில்லை
மனம்...


செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்


உதிரா மலராய்
நீ மனதில்
மலர்ந்திருக்க
இந்த உதிரும்
மலரும் ஏனோ


உன்னால்
தண்டனை
அனுபவிக்கின்றது
நகமும் கொஞ்சம்
திருப்பிக்கொள்
உன் பார்வையை


தனித்திருக்கும்
போதெல்லாம்
மனம் உன்னிடமே
தாவுது...


மறைத்துக்கொள்
நெஞ்சத்தை
எனக்கு சொந்தமான
இதயத்தை
தீண்ட காற்றுக்கும்
அனுமதியில்லை


விழிகளுனை
கண்டுவிட்டால்
மனமும்
ஏனோ பறக்கின்றதே
சிறகடித்து
வண்ணத்துப்பூச்சியாய்


கூந்தலை பிடித்திழுத்து
விளையாடி ஜிமிக்கியும்
உன்னை அடிக்கடி
ஞாபகபடுத்துது


தாயை காண
காத்திருக்கும்
குழந்தையாய்
உன் வழி
நோக்கி
என் விழிகளும்
காத்திருக்கு


அகிலமும் அசைவற்று
போனது
ஒற்றை நொடியில்
நெற்றி முத்தத்தில்
நான் எனை
மறந்தபோது


பொழியும்
மழையைவிட
உன் பார்வையின்
சாரலே
என்னை நனைத்து
செல்கிறது


சிந்தும்
நீரை சிறைபிடிக்க
சிக்கி கொண்டது
உன் நினைவு


கனவு
கலைந்த பின்னும்
விழிகள்
மூடிக்கிடக்கின்றேன்
உன் பிம்பம்
கலைந்திட
கூடாதென


தொலைத்த
புன்னகையெனும்
முகவரியை
என்னவன்
தேடி கொடுத்தான்


காற்றலையில்
கலந்து வந்த
உன் குரல்
இதயத்தை
நனைக்க
மனமும் பூத்தது
பூஞ்சோலையாய்


காதல்
கணவா
களைத்திருக்கும்
உன் கண்களுக்கும்
ஓய்வுகொடு
கனவில் சந்திப்போம்


இந்த நொடி
நீளாதா
என்று மனதை
தவிக்கவிடுகிறாய்
சுகமாய்


மலரும்
நினைவுகள்
மனதை தாலாட்ட
உறங்கிப்போனது
விழிகள்


ஏதோ
ஒரு நினைவு
விழிகளை
நனைக்கும்
போதெல்லாம்
புன்னகையுடனேயே
கடந்துவிடுகின்றேன்
அந்நொடியை


பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து


யாரிடமும்
ஆறுதலை
எதிர்பார்க்காத
மனம்
உன் தோளை
மட்டுமே தேடுது
சாய்ந்து கொள்ள


நினைவும்
ஒரு அழகிய
இசை
அது நீயென்பதால்


விழி
மொழி புரிந்தும்
மௌனத்தை
பரிசளித்து
நீயே
என் விடையாகிப்போனாய்


துரத்தும்
பிம்பத்தை
கலைத்தே
களைத்து
போனது
கண்கள்


நினைவிலும்
நிஜத்திலும்
என் மகிழ்வெல்லாம்
உன்னால்


உன் நினைவு
தொற்றி கொண்டால்
என்னுள்ளும்
பல கிறுக்கல்கள்
கவிதைகளாக


உன் தேடல்
எதுவாகவும்
இருக்கட்டும்
என் தேடல்
நீயே


வாழ்க்கை
வெறும் கனவோ
என்றிருந்தேன்
நீயும் வந்தாய்
கலையாத
வண்ண கனவாய்


உன்
வருகை
தாலாட்டுது
மனதை
மாலைநேர
தென்றலாய்


நம் உலகத்தில்
உன்னென்
நிழலை தவிர
வேறதெற்கும்
இடமில்லை


இரு விழி
கவி எழுத
வீழ்ந்தேன்
உன் இதயத்தில்


நீள்கின்ற
நிமிடங்களும்
நொடிகளாய்
கரைந்திடுதே
உன்னில்
மூழ்கிவிட்டால்


உன் கண்ணில்
தூசிவிழ
கலங்கியது
என் விழிகள்


திணறடிக்கும்
உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின்
கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்


தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்


சலிக்காமல்
காத்திருக்கும்
நிலவாக உனை
காண நான்


என் கவிதைகளின்
தலைப்பு நீ
உன் கவிதைகளின்
வரிகள் நான்


நான் என்றோ
தொலைந்தேன்
உன்னுள்
உனக்குள் நான்


அளவில்லாத
உன் அன்பு வேண்டும்
என் ஆயுள் முழுவதும்


கருங்கூந்தலை கலைத்திடும்
தென்றல் காற்றும்
உன் ஸ்பரிசத்தையே
நினைவூட்டி செல்கிறது


மறக்க நினைக்குறேன்
இருந்தும்
மறக்காமல் நினைக்கிறேன்


எல்லோருக்கும் அழகை வர்ணிக்க
தானே கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்


நின்று திரும்பிப்பார்க்க
விடவில்லை நாணம்
நீ நிழலாய்
பின்தொடர்கிறாய்
என தெரிந்தபின்பும்


மலையிடம் பேச
தென்றல்
மழையிடம் பேச
மின்னல்
மலரிடம் பேச
வண்டு
என் மனதிடம் பேச
நீ


ஊடலை கூட
காதலாய் மாற்றும்
மாய வித்தை
எங்கிருந்து
கற்றாயோ கள்வனே


அத்தனை
மன சுமைகளுக்கும்
உன் அரவணைப்பு
ஒன்றே போதுமானதாக
இருக்கிறது
என் ஆறுதலுக்கு


பார்வைத்தீண்டல்
பரவசம்தான் என்றாலும்
அருகருகே இருக்கும் போது
அதிகமாய் துடிக்கிறது இதயம்
விழிகளை சற்றே
விலக்கிக்கொள்ளேன்


பூவுக்குள் உணர்ந்த
அன்பை பூகம்பமாக்கிவிட்டு
தடயமே இல்லாமல்
தானே அழித்துவிட்டது
காலம் ரணமாகிப்போன
இதயத்திற்கு
ஒத்தடமாய் இருப்பது
உன் நினைவு மட்டுமே


நீ என் வாழ்வின்
பாதியில் அதிசயம்
மீதியில் ரகசியம்


நான் கேட்டு ரசித்த
கவிதைகளும்
அவள் சொல்ல விரும்பிய
வார்த்தைகளும்
அவளின் இரு விழிகளுக்குள்
புதையல்களாய்
கொட்டி கிடக்கின்றன


உன்னிடத்தில்
மிண்டும் உரையாடலை
தொடங்குவதற்கு
உனை என்னிடத்தில்
தக்கவைப்பதற்கு
இதுவும்
ஒரு புத்திசாலித்தனமான
முட்டாள்தனம்


அவன் வாங்கி தந்த
சிகப்பு கல் மூக்குத்திக்கு
இணையாய் சிவந்தது
அவள் முகம் அவன்
தந்த முத்தத்தால்


பலமுறை கடந்து போனாலும்
அவள் மட்டும்
ஏனோ பக்கத்தில் இருப்பது
போன்ற உணர்வு
மனதை வருடிப்போகிறது


உன்னருகில்
உன் நினைவில்
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்


எத்தனை மைல் தூரம்
நீ இருந்தாலும்
எந்தன் மனதை
சிறைப் பிடித்தவன் நீயே


தட்டி விடவே
நினைக்கிறேன்
ஒட்டிக் கொள்ளும்
உன் நினைவுகளை


மின்னல் கீற்றாய்
இதயத்தை தாக்கி
புயலாய் மனம் புகுந்து
திமிராய் குடிக்கொண்டாய்
என் இதயம் பறித்தாய்
கல்நெஞ்சக்காரா


அலைப்போல்
துள்ளி எழுந்து
பனிப் போல்
உருகுதே எனதுள்ளம்
உனை கண்டதும்


தேடிக்கிடைத்தால்
என்ன செய்வது
எனவே நீ யென்
தெவிட்டாத தேடலாகவே
இருந்துவிடு


அவளை
ஏன் பிடித்திருக்கிறது
என்ற கேள்விக்கு
தெரிந்துகொள்வதில்
என்ன ஸ்வாரஸ்யமிருக்கப் போகிறது
புதிராகவே இருந்துவிட்டுப் போகட்டுமே
என் நேசம்


முத்தம்
பகிரவே வந்தேன்
முழுவதும்
பறித்துக்கொண்டாயே


நிலை நின்ற கண்களில்
செய்திகள் வந்தன
மௌனமாக நெஞ்சோடு
நீ யிருக்கிறாய் என்று


விருப்பமிகு காரணங்கள்
இல்லாமல் இல்லை
அவளை கண்டதும்
காதல் வர


உன்னைப் பார்த்தவுடன்
வெட்கத்தில்
சிக்கி தவிக்கிறது
என் வார்த்தைகள்
பேச வழியின்றி


Free Online Valentine's Day Card Maker

Lovers day Quotes in Tamil - Valentine's Day Wishes in Tamil

Valentines day Tamil Kavithaigal

Valentines day Tamil Kavithaigal

Valentines day Tamil Kavithaigal

Valentines day Tamil Kavithaigal

Valentines day Tamil Kavithaigal

Valentines day Tamil Kavithaigal

Valentine's Day 💜

Valentine' Day Greeting Image Generator with Name - Linux Terminal Style valentine's day wishes.

Happy Valentine's Day Terminal Style Wish image ❤️

Linux Terminal Style Greeting for Valentine's Day

Valentine's Day - Greeting image


➡ Create your Greeting card

👉 👉   💚 Create Now   👈 👈





Tamil Kavithai and Tamil SMS Whatsapp Channel

👉 👉   💚 Join Now   👈 👈


Love Calculator 🔢


Love Calculator

➡ Just Enter your Name and Partner's Name to Get the Love Percentage Result 😊

👉 👉   💚 Check Now   👈 👈


உன்னை கண்ட
நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான்
பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி