Tamil SMS - Here are the Latest Collections of Tamil Kavithaigal 2020.

Tamil Kavithai and Quotes

கவிதை SMS

இந்த பதிவில் அனைத்து விதமான கவிதை வகைகாலும் உள்ளன

👇👇👇👇👇👇👇

Tamil Status


தனிமையும்
சில நேரங்களில்
தவம்தான்
ஆனால் தவமும்
பல நாட்கள்
தொடர்ந்தால் சாபமாகும்


சொல்ல முடியாத
சோகங்களும்
நினைவுகளும்
ஒவ்வொருவர்
மனதிலும் உண்டு
யாரும் மறந்து வாழவில்லை
மறைத்து தான் வாழ்கிறோம்


உலகமே நினைத்தாலும்
ஒரு உண்மையான
அன்பைத் தரமுடியாது
ஆனால்
ஒரு உண்மையான அன்பு
நினைத்தால்
ஒரு உலகத்தையே தர முடியும்


பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது


எண்ணங்கள் பிழையானால்
சிறகு அடிக்கும்
பட்டாம் பூச்சியும்
சிலந்தி வலைக்குள்
சிக்கிக்கொள்ளும்


ஏமாற்றி
விட்டதாய் நினைத்து
ஏமாந்து விடுகின்ற
வாழ்க்கையில் தான்
சொல்ல முடியா
சோகங்களும் காயங்களும்
நிரம்பி கிடக்கின்றன


தவறு நம்மிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய வழக்கறிஞர் யாருமில்லை
தவறு அடுத்தவரிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய நீதிபதி யாருமில்லை


மனசாட்சிக்கு
பதில் சொல்ல முடியாம
தவிக்கிறத விட
பெரிய தண்டனை
வாழ்க்கையில
வேற எதாகவும்
இருந்திட முடியாது


தந்தைக்கும்
கடவுளுக்கும்
சிறு வித்தியாசம் தான்
எப்பவுமே கண்ணுக்கு
தெரியாதவர் கடவுள்
இருக்கும் வரை
தெரியாதவர் தந்தை


என்னதான் நமக்கு
நீச்சல் தெரிந்திருந்தாலும்
சாக்கடையில்
விழுந்து விட்டால்
எழுந்து வரவேண்டுமே
தவிர அங்கும்
நீச்சல் அடிக்கக் கூடாது


உரசிக்கொண்டே இருக்கும்
காதலை விட
உள்ளத்தில் உள்ளதை
உரையாடும்
காதல் வலிமையானது


அன்று வயதைப் பார்த்து
வந்த மரியாதை
இன்று வசதியை பார்த்து
மட்டுமே வருகிறது


நாலு பேர்
நம்மை கவனிக்கிறார்கள்
என்கிற எண்ணம்
எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்


சில சமயங்களில்
நம் தலைகனத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்
இல்யென்றால்
நம் சுயமரியாதை
என்ற ஓன்றை
இழக்க நேரிடும்


எல்லாம்
எனதாகவேண்டும்
என்பதை விட
எனதானது எல்லாம்
நிலையானதாக வேண்டும்
என்று வாழ்வதே இன்பம்


வட்டம் போட்டு
வாழ்வதில் தவறு இல்லை
ஆனால்
அந்த வட்டம் மட்டுமே
வாழ்க்கை என்று
நினைப்பது தான் தவறு


பிறருக்காக
இரக்கப்படுவதில் தவறில்லை
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்க்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே


வ(ழி)லியில்
வாழ்க்கையை தேடாதீர்கள்
வாழ்க்கையிலும்
வ(லி)ழிகள் உண்டென
கடந்துவிடுங்கள்


ஒலிக்கு முன்
ஒளி வருகிறது
இது ஒரு அறிவியல்
உண்மை அதனால் தான்
பேசுவதற்கு முன்
புன்னகைப்பவர்கள்
நம் மனதில் முதலில்
இடம்பிடித்து விடுகிறார்கள்


அன்பு
நீரை போன்றது
இறுக்கிப் பிடிக்க
நினைத்தால்
இறுதியில்
எதுவும் மிஞ்சாது


தூண்டிலுக்கு
தப்பிய மீன்
துண்டாவதில்
இருந்தும்
தப்பி விடும்


அருகில் இருப்பவர்களின்
பாசத்தை உணராமல்
தொலைவில் இருப்பவர்களின்
அன்பை தேடிக்கொண்டு
இருக்கிறோம் தொலைபேசியில்


அவமானங்களை
தேடித் தேடிக்
கொடுக்கும் பொழுது
அவர்களின் முகவரிகளை
சேகரித்து வையுங்கள்
வெற்றி மேடைக்கான
பத்திரிக்கைகளை
அனுப்புவதற்காக


மதிப்பவர்களை
மனதில் நிறுத்து
உன்னை மிதிக்க
நினைப்பவர்களை
காலடியில் கிடத்து


வாழ்க்கையில்
வந்துட்டு போற
ஓவ்வொரு உறவும்
மறக்க முடியாத
ஏதோ ஒரு நினைவுகளை
பொக்கிஷமாக
தந்து விட்டு தான்
செல்கிறார்கள்


நம்ம பண்ணுரது
சிலருக்கு
கடுப்பு ஏறுதுனா
அப்போ
நமக்கு பிடிச்சத
நம்ம சரியா
பண்ணுறோம்னு அர்த்தம்


வானிலைய கூட
ஓரளவுக்கு
அறிய முடியுது
சிலரின் மன நிலைய
புரிந்துக்கொள்ள
முடியிதே இல்ல


கத்துக்க ஆயிரம்
விஷயம் இருக்கலாம்
ஆனால்
அத கத்துக்குற
நிலமையில
நாம இருக்கனும்
அப்படி இல்லைனா
வாழ்க்கை
நமக்கு நல்லா
கத்துக்குடுத்துட்டு போயிரும்


துன்பம் துன்புற
செய்தாலும்
சிலர் முகத்திரை
அவிழ்த்து காட்டி
மீண்டும் யாரையும்
நம்பாதே எனும்
அறிவுரை வழங்கியே
செல்கிறது


நலம் விசாரிப்பதோடு
வார்த்தைகளை
முடித்துக்கொண்டால்
உறவுகள் நீடிக்கும்


சோர்வடைந்து விடாதே
வாழ்க்கை நீ
எதிர்பாக்காத
நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை
கொண்டுவரும்


பேசுபவர்கள்
வார்த்தைகளின் வலிமையை
உணர்கிறார்கள்
பேசாதவர்கள்
மௌனத்தின் வலிமையை
உணர்த்துகிறார்கள்


கண்ணீரிலும்
உள்ளது உப்பு
அதை தவரானவற்கு
இடாமல்
தகுந்தாற்கு இட்டால்
உணவு போல்
உறவும் சுவைக்கும்


ஒவ்வொரு மனிதனும்
ஒரு புதிய புத்தகம்
பழகும் பொழுது தான்
படிக்க முடியும்


ஒரு மென்மையான
வார்த்தை
ஒரு கனிவான பார்வை
ஒரு இதமான புன்னகை
இவை அனைத்தும்
நிறைந்திருக்கும்
உறவு கிடைப்பது
வாழ்க்கையில் வரமே


மேலோட்டமாக
சிந்திக்கும் போது
எல்லாம்
சாதாரணமாக தெரியும்
செயல்படுத்தும்
போது தான்
அதில் இருக்கும்
சிரமங்கள் புரியும்
சரியான
திட்டமிட்ட செயல்பாடு
மட்டுமே
வெற்றியை சேர்க்கும்


எதையும்
யாரிடமும் எதிர்பார்க்காமல்
வெற்றி
தோல்வி
என்று மனம் சஞ்சலப்படாமல்
நடப்பது அனைத்தும்
நன்மைக்கே
என்று மகிழ்ச்சியுடன்
வாழ்வோம்
வாழ்க்கை வாழ்வதற்கே


ஒருவரை
துன்புறுத்துவது
மிகவும் எளிது
நம் அன்பை
உணரச் செய்வது
மிகவும் கடினம்


வாசம் கொண்ட
மலர்கள்
பூந்தோட்டத்திற்கு அழகு
பாசம் கொண்ட உறவுகள்
வாழ்க்கை
தோட்டத்திற்கு அழகு


அம்மா என்ற சொல்
நமது முதல் மொழி
அப்பா என்னும் சொல்லே
நமது முதல் முகவரி


மாறிவிட்டோம்
என்பதை விட
பல வலிகள் நம்மை
மாற்றி விட்டது
என்பதே உண்மை


மனிதன்
துன்பப்படுவதற்கு முன்பு
கல்லாகவும்
துயரங்களுக்கு பின்பு
மீண்டும் தன்னைத் தானே
உருவாக்கிக் கொள்வதில்
சிற்பியாகவும் இருக்கிறான்
(யதார்த்தம்)


புன்னகை
சக்தி வாய்ந்தது
நம்மை நேசிப்பவர்களுக்கு
மகிழ்ச்சியாய்
வெறுப்பவர்களுக்கு
தண்டனையாய்


வாழ்க்கையில்
ஒவ்வொரு விஷயமும்
அழகு தான்
அவற்றை ரசிக்க கூடிய
மனநிலையில் இருந்தாள்


சோகம் துன்பம்
இரண்டுமே
நம் வாழ்வின்
நிலையற்ற
கண்ணாடிகளாகும்
அவற்றை கடந்து
வாழ பழகிக் கொண்டால்
அதை விட
சிறந்த பாடம்
ஏதும் இல்லை


நாம் நகர்ந்த இடம்
எப்போதுமே
வெற்றிடமாகவே
இருக்குமாறு
சிறப்பாக தரமாக
வாழ்ந்துவிட்டு போகணும்


கடந்து சென்றவை
அனைத்தும்
பாதைகள் அல்ல
நாம் கற்றுக்கொண்ட
பாடங்கள்


நம்மள பிடுச்சு
பேசுறவங்களை விட
பிடுச்ச மாதிரி
நடிச்சு பேசுறவங்க
தான் அதிகம்


நம்மை அலட்சியமாக
நினைப்பவர்களை
விட்டு துணிந்து விலகுங்கள்
நம்மை பொக்கிஷமாக
நினைப்பவர்கள் இருப்பார்கள்
அவர்களுடன் இணைந்து
பயணத்தை தொடருங்கள்
வாழ்க்கை நலம் பெறும்


வாழ்க்கைக்கு
உதவாத அனைத்தும்
காற்றில் பறந்துவரும்
தூசியே தட்டி விட்டுட்டு
போயிட்டேருக்கணும்


இலக்குகள்
கடினமாகும் போது
முயற்சியும் பயிற்சியும்
அதிகமாகவே
தேவைப்படுகிறது
தன்னம்பிக்கை
கொண்டு செயல்படு
வெற்றி மாலை
உன்னை தேடி வரும்
தருணம் இது


நடப்பவை அனைத்தும்
நல்லதாக
இல்லை என்றாலும்
நல்லது மட்டுமே
நடக்க வேண்டும்
என்று நம்புவோம்


வாழ்க்கையில்
எதையும்
தேடும் பொழுது
பொறுமையுடன்
தேடுங்கள்
பொறாமையோடு
தேடாதீர்கள்


நம் வாழ்க்கையின்
சந்தோஷம்
நம் மனதில் இருக்கிறது
உன் மனது அடுத்தவர்களை
நம்பி இருந்தால்
உனக்கு சந்தோஷம் இருக்காது


நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரிங்கள் மட்டுமே
நம் வாழ்க்கையை
அழகுபடுத்தும்


இதுதான்
வாழ்க்கையானு
சலித்து கொள்ளாமல்
இதுவும் வாழ்க்கைதானு
கடந்துவிடுங்கள்


வாழ்க்க
மிக அழகாகிறது
விரும்பும் ஒருவரின்
இதயத்தில்
இடம் பிடிக்கும் போது


வாழ்க்கை என்பது
நீ பார்த்தது போல்
இருக்காது ஆனால்
நீ நினைத்தப்படி
மாற்ற முடியும்
நீ முயற்சித்தால் மட்டுமே


இந்த உலகம்
உன் முயற்சியை
கவனிக்காது
முடிவுகளைத் தான்
கவனிக்கும்
சிந்தித்து செயல்படு


பிறருடைய குற்றம்
காண்பது எளிது
தன்னுடைய குற்றம்
காண்பது கடிது


வாழ்க்கை
இருக்கும் போதே
வாழ்ந்து விடு
அடுத்த நொடி
என்ன நடக்கும்
என்று கூட
யாருக்கும் தெரியாது


நீங்க எந்த அளவுக்கு
நெருங்கி பழகுறிங்களோ
அந்த அளவுக்கு
ஆபத்து அதிகம்
பொதுவா சொன்னேன்


உதவி செய்வதில்
தவறில்லை
பிறரின் தேவைகள
எதுவென அறிந்து
உதவிடுதல் நலம்


எதை நாம்
மறக்க நினைக்கின்றமோ
அது மறக்க முடியாத
நினைவுகளாகி விடுகிறது
ஏதோ சில தருணங்களில்


போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும்
போர்க்களமல்ல
அது பூவனம் போல
ரசித்துக் கொண்டே
வாழ்வோம்


விரும்பும் போதெல்லாம்
விரும்பியது
கிடைத்து விட்டால்
விருப்பத்திற்கு
என்ன மதிப்பு


மலை ஓங்கி
உயர்ந்து காணப்படுகிறது
அதுபோலவே மனதில்
தோன்றும் எண்ணங்கள்
உயர்வானதாக
இருந்து விட்டால்
துன்பம் இல்லை


தனக்கான பாதையை
தானே தேடிக் கொள்ளும்
தண்ணீராய் இரு
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி கிடைக்கும்


வாழ்க்கை
எவ்வளவு கடினமான
கவலைகளை கொடுத்தாலும்
அதை அனைத்தையும்
கடந்து வாழும்
மனிதன் அதைவிட
வலிமையானவன்
ஒவ்வொரு கவலையும்
நம்மை திடப்படுத்தி
வாழ்க்கையை
வெற்றி பெற
செய்யவே வைக்கிறது


சந்தோஷத்தில் கூட
இருந்தவர்களை விட
கஷ்டத்தில் தோள்
குடுத்தவர்களை என்றும்
மறந்து விடாதே


வாழ்க்கையில
எந்த சூழ்நிலையிலும்
நம்மளைத் தனிமையில்
விடாத உறவைச் சம்பாதித்தால்
வாழ்கை வரமாகும்


தவறுகளை எல்லாம்
அழித்து விட்டு
வரையும் போது ஓவியம்
அழகாகிறது
வாழ்க்கையிலும்
அப்படி ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தால்
உறவுகளும் வரமாகிவிடும்


நீ யாருக்கு வேண்டுமானாலும்
பொய்யாக நடித்து விடலாம்
உன் மனசாட்சியை தவிர
உன் மனசாட்சியிடமும்
நீ பொய்யாக
நடிக்க முயற்சி செய்வாயானால்
நஷ்டம் உனக்கு மட்டுமே


இறங்கும் நேரத்தில்
கிடைக்கும் ஜன்னலோர சீட்
போலத்தான் வாழ்க்கையும்
வறுமையை வென்று
முடிக்கும் போது
இளமைக்காலமும்
சேர்ந்தே முடிந்து விடுகிறது


விளையாட தெரிந்த
குழந்தையாக இருந்தாலும்
வாழ்க்கை ஆட்டம்
ரொம்ப கஷ்டம் தான்


நம்மிடம் இருந்து
பிரியும் வரை
முன்னும் பின்னும்
போவோம்
வாழ்க்கை எனும்
ஆட்டத்தில்


நமக்கு பிடிப்பவர்களுக்கு
நம்மை பிடிப்பதில்லை
நம்மை பிடிப்பவர்களை
நாம் விரும்புவதில்லை


தடைகள் இல்லாத
பாதையில்
நடக்கும்போதெல்லாம்
நினைத்துக்கொள்
யாரோ தடைகளை
உடைத்து போட்ட
பாதை இதுவென்று


உறவில்
முன்னிலைப்படுத்த வேண்டியது
அழகோ அறிவோ
அன்போ புகழோ
திறமையோ அல்ல
நேர்மை


உன் மனசாட்சி
தூங்கிக் கொண்டிருக்கிறது
என்று நினைத்து
தவறு செய்யாதே
அது மட்டும்
விழித்துக் கொண்டால் பிறகு
நீ தூங்கவே முடியாது


உருவமில்லா பாறை கூட
செதுக்கினால் தான்
அழகிய சிற்பம்
உங்கள் வாழ்க்கையை
நீங்களே விடாமுயற்சியால்
அழகியகுணத்தால்
செதுக்கிக் கொள்ளுங்கள்


உன்னை விரும்பிய
ஒன்றை விட்டு
நீ விலகும் போது
நீ விரும்பிய ஓன்று
உன்னை விட்டு
விலகத் தொடங்கும்


எத்தனை
தூரமானால் என்ன
வார்த்தைகள் மொழிகள்
தேவையில்லை
சில உறவுகளுக்கு


வார்த்தைகளால்
விவரிக்க இயலாத
சில வலிகளுக்கு
என்றுமே
புன்னகை மட்டுமே
மருந்தாகிறது


தேடுவதற்கு
யாராது இருந்தால் தான்
தொலைந்து போவதில் கூட
சுவாரசியம் உண்டு


ஒவ்வொருவரின்
இதயமும்
மண் பொம்மை போலவே
நாம் விரும்பியவர்கள்
விலகிச் சென்றதும்
அது உடைந்து
உபயோகமில்லாமல்
போய் விடுகிறது


வாழ்க்கை எனும்
பந்தயத்தில்
கீழே விழும் போது
எழுந்து ஓடுவதற்கான
வழிகளை
நீங்கள் தேர்ந்தெடுக்கா விட்டால்
வலிகள் உங்களைத் தேர்ந்தெடுக்கும்


எத்தனையோ நபர்கள்
நம்மை கடந்து சென்றாலும்
யாரோ ஒருவர் மட்டும்
மனதிற்கு நெருக்கமாய்
தங்கி விடுகின்றனர்
அவர்கள் அருகில்
இல்லை என்றாலும்


பேருந்தில்
இருக்கைகாக
ஓடுவது போல
வாழ்க்கை எனும்
பயணத்தில்
காதல் என்ற
இருக்கைக்காக
பலர் ஓடுகின்றனர்


கடந்து போகட்டும்
என காத்திருப்பதை விட
காலத்தோடு போட்டி போட்டு
முன்னேறுவதே சிறந்தது


உண்மையாய் இருப்பது
உண்மையில்
பயனின்றி தான் போகிறது
ஆனாலும் இருக்க
விரும்புகிறேன்
எப்போதும் உண்மையாய்


இழப்பை ஏற்றுக்
கொள்பவர்களுக்கு
மட்டுமே
இந்த உலகம் வாழ
கற்றுக் கொடுக்கும்


காலை நேரம் வருவதெல்லாம்
இரவு நேரம் வருவதற்கே
அதுபோல
கவலைகள் வருவதெல்லாம்
சந்தோஷங்கள் வருவதற்கே


வரும் கனவையெல்லாம்
நிஜமென்று
நம்ப சொல்கிறது இரவு
அவை யாவும் பொய் என்று
நிரூப்பித்து விடுகிறது பகல்


நபர்களுக்கும் சூழலுக்கும்
ஏற்றவாறு நடிக்கத் தெரிந்தால்
நீங்கள் தான்
உலகின் மிகச் சிறந்த நல்லவர்


நாம் சரியாக
இருந்தால்
கெஞ்சவோ
அஞ்சவோ
தேவையில்லை


நீங்கள் எதிர்பார்க்காதபோது
சுவாரஷ்யங்களை
நிகழ்த்துவதுதான்
வாழ்கையின் அதிசயம்


எதிரியிடம் பழகு
ஆனால் ஒருபோதும்
காரியவாதியிடம்
பழகவே பழகாதே


எங்க போறீங்க இதோ உங்களுக்காக