This is a Special Post Section for Publishing the போஸ்புக் நண்பர்கள் கவிதை - Tamil Facebook Friends Kavithai.

You can also Publish your Tamil Kavithai Here - We will give the Proper Credits - Submit your SMS

Kavithai for Tamil Whatsapp Status and instagram Stories

போஸ்புக் நண்பர்கள் கவிதை

Whatsapp status Tamil


உண்ணும் கையின் மேற்புறத்தில்
என் பெயரை அவள் பச்சை குத்தினால் அது கவிதை!

Kavithai by -
Shiva Chelliah


நிர்வாணத்தை..,
துய்ப்பது காமம்,
ரசிப்பது காதல்,
மறைப்பது நட்பு !!


காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே
நாதவடி வானவளே நல்லஉயிரே கண்ணம்மா
மகாகவி 😍😘💙


உன்னோடு பருகும்
ஒரு கோப்பை தேனீருடன்
இப்படியே நீளாத இந்நாள்...

Kavithai by -
Madhan KumaRr


நேரம் ஒதுக்கி
பேசுபவர்களிடம் பழகுங்கள்
வேலைகளை
ஒதுக்கி வைத்து விட்டு
பேசுபவர்களை நேசியுங்கள்


எல்லோருக்கும்
பிடிக்குற மாதிரி
நாம இருப்போமானு
தெரியல
ஆனா நம்மளையும் பிடிக்கிற
சில பேர்கிட்
நாம உண்மையா
இருந்தாலே போதும்


நடப்பதெல்லாம் நல்லதுக்கே
என்று மட்டும்
நினைத்து விடாதே
நடக்காதது கூட
நல்லதுக்குத் தான்
மறந்து விடாதே


மற்றவரின் மகிழ்ச்சியில்
மகிழ்ச்சி காணும்
மனிதனாக இருங்கள்
மற்றவரின் மகிழ்ச்சிக்காக
உங்கள் மகிழ்ச்சியை
தொலைக்கும் முட்டாளாய்
இருக்காதீர்கள்


அழகான மனிதர்களை
நினைத்து ஏங்காதீர்கள்
பிறகு அன்பான
மனுதர்களை நினைத்து
அழ வேண்டி வரும்


மகிழ்வாய் வாழ்பவர்களுக்கு
பெரும்பாலும்
மாறுவேடத்தில் தான்
வருகிறது துன்பங்கள் யாவும்


நன்றாக பழகும்
அனைவரும் நண்பர்கள்
இல்லையென்ற சிறு தெளிவு
இருந்தால் போதும்
சில துரோகங்களையும்
பல மாற்றங்களையும்
தவிர்க்கலாம்


கவலைகளை மட்டும்
மிகச் சுலபமாய்
வெளிக்காட்டி மற்றவரோடு
பகிரும் நம்மில் பலர்
மகிழ்ச்சியை பங்கிட்டு
கொள்ள விரும்புவதில்லை


சிறிய தவறைக் கூட
நியாயப் படுத்தாதீர்கள்
அதைப்போல
பெரிய தவறு
வேற எதுவுமே இல்லை


ஒன்னு கடந்து போகனும்
இல்லைனா
கண்டுக்காம போக
கத்துக்கிடனும்
அப்போ தான் நம்ம life
கலகலப்பா இருக்கும்


எல்லோரையும்
புரிந்து கொள்ள
முயற்சிக்கும் போது
அங்கு நம்மை
புரிந்து கொள்ள
யாருமில்லை என்பதை
நாம் உணர்வதேயில்லை


எத்தனை சோதனைகள் வந்தாலும்
சகித்துக்கொண்டு கடந்துவிடு
புன்னகையால் மட்டுமல்ல
கண்ணீர் சிந்தாத இமையாளும்


பிடித்தாலும்
பிடிக்கவில்லை என்றாலும்
ஜெயித்தாலும் தோற்றாலும்
கட்டாயம் விளையாண்டே
தீர வேண்டும்
வாழ்க்கை என்னும்
விளையாட்டு மைதானத்தில்


விளையாட்டாக
பேசினாலும்
வம்பில் முடிவது
ஒரு வித புரிதல்
குறை பாடு தான்


பலமில்லாத போது
பகை கொள்ளாதே
பலமான பின்
திமிர் கொள்ளாதே
இரண்டும் நிம்மதியை
இழக்க செய்து விடும்


எப்போதும் இளமையாக
இருக்க முடியாது
ஆனால்
எப்போதும் அழகாக
இருக்க முடியும்
சிரித்தால்


யாரிடமும் சொல்லாதே
என்று நீங்கள் யாரிடமோ
கூறிய ரகசியம்
நிச்சயமாக யாரிடமோ
விவாதிக்கப்பட்டு கொண்டு
தான் இருக்கும்


சிதறிவிடும் என்பதற்காக
தேங்காயை உடைக்காமல்
வைத்திருந்தால் அழுகிவிடும்
அப்படித்தான்
சில நேரங்களில்
நமக்குள் வைத்திருக்கும்
சில எண்ணங்களும்


இங்கே உண்மையில்
யாராலும் யாரின்
இடத்தையும் நிரப்பவும்
இயலாது
மறக்கச் செய்யவும்
இயலாது


பிறரின் தேவைக்கு
சேவை செய்யும்
வரை நீங்கள்
பிடித்தமானவர்
இல்லையெனில்
மிதித்தே மக்கப்படுவீர்
அவர்களது மனதில்


சரியோ தவறோ
தைரியமாக எதையும்
வெளிப்படையாக
பேசுபவர்கள்
யாருக்கும் துரோகியாக
இருக்க மாட்டார்கள்


இருப்பதை வைத்து
சிறப்பாக
வாழத் தெரியாவிட்டால்
எதைக் கொடுத்தாலும்
திருப்தியான வாழ்க்கையை
வாழவே முடியாது


நாம் அதிகமாக
ஏமாறுவது
நம்பியவர்களிடம் தானே
தவிர
அன்னியமானவர்களிடம் அல்ல


அனைவரிடத்திலும்
நாம் எப்படி தான்
ஒரே விதமாக
நடந்து கொண்டாலும்
நம்மை பார்க்கும் பார்வைகள்
பல விதமாக தான் இருக்கும்


கண்ணுக்கினிய இயற்கையும்
கண் காணாத தென்றலுமே
பல நேரங்களில்
சில சோகங்களை
மறக்கச் செய்கின்றது


சிதறி அழியும்
வார்த்தைகளை
சிந்துவதை விட
மௌனம் சிறந்தது


வாழ்க்கையில
சில விஷயங்கள்
சரியாகிவிடும்
என்பதை விட
பழகிவிடும்
என்பதே நிஜம்


வாழ்க்கையிலும் சரி
வாட்ஸ்அப்லயும் சரி
எல்லோரும் பாக்குறது
Status மட்டும் தாங்க


எத்தனை நாட்களானால்
என்ன
தொலைத்த இடத்தை
கடக்கும்பொழுது
சில விநாடிகள்
இழந்ததை தேடவே
துடிக்கிறது கண்கள்


எவ்வளவு
கோபம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டுடாதீங்க
அடிகளை விட
அது தரும் வலிகள் அதிகம்
பிறகு எத்தனை முறை மன்னிப்பு
கேட்டாலும் அந்த காயம் ஆராது


பிடித்தவர்கள் என்றாலும்
அவர்கள்
நம்மைப் பற்றி கூறும்
விமர்சனங்கள் மனதிற்கு
பிடிப்பதில்லை


இன்றுனை
தூக்கி வைத்திருப்பவர்
ஒருநாள் இறக்கியும் விடலாம்
எறிந்தும் விடலாம்
இரண்டுக்கும் தயாராக இரு


அவரைப்போல்
இவரைப்போல்
எவரைப்போலும்
நகலெடுத்து வாழ
முயற்சிக்க வேண்டாம்
நாம் நாமாக வாழுவோம்


இன்று யார்
விட்டுச்சென்றாலும்
கவலையின்றி சாதாரணமாக
வாழ்பவர்கள் தான்
ஒரு சமயத்தில்
சிறிது நேர பிரிவிற்கே
நாள்முழுக்க
அழுது தீர்த்திருப்பார்கள்


ஒருவரை
காயப்படுத்துவது என்பது
ரொம்ப சுலபமான ஒன்று
அவை ஒரு நாள் நம்மையும்
காயப்படுத்தும்
என்பதை உணராமல்
இருப்பது தான் அறியாமையே


ஒருவர் கஷ்டப்படும்
காலத்தில் தான்
பலரின் உண்மை முகம்
காண்கிறார்கள்


மற்றவர்களின்
வாழ்க்கையை கண்டு
அவர்கள் போல்
வாழ வேண்டும்
என்று ஆசைபடாதீர்கள்
அவரவர் வாழ்க்கையில்
உள்ள அவஸ்தையை
அவர்கள் மட்டுமே
அறிவார்கள்


சரியோ தப்போ
தைரியமா பேசனும்
பதில் சொல்ல பயந்தாலே
பாதி தப்ப நம்ம தலையில
கட்டிருவாங்க


கஷ்டமும் நஷ்டமும்
போகப்போக சரியாகிவிடும்
என்பார்கள் ஆனால்
அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை எல்லாம்
போகப்போக பழகிவிடும்
அவ்வளவு தான் வாழ்க்கை


அளவிற்கு
அதிகமாக போனால்
தனிமை கூட
வெறுமை தான்
ஆனால்
அதுவும் நிம்மதியாக
தான் இருக்கிறது


எல்லோருக்கும் தான்
வாழ்க்கை இருக்கிறது
ஆனால்
வாழ தெரியாமல்
காலத்தை வீணடித்தவர்களே
இங்கு அதிகம்


வாழ்வின் மதிப்பு
நாளையென்பது
கேள்விக்குறியாகும் தருணத்தில்
முழுதாக உணரப்படும்


வீழ்த்தவே முடியாது
என்பதெல்லாம்
ஒரு நாள்
வீழ்ந்து தான்
போகும்


அறிமுகத்தில்
இருக்கும் தரம்
போக போக
இருப்பதில்லை
பொருள்களிடம்
மட்டும் அல்ல
சில மனிதர்களிடமும்தான்


லிஃப்ட் கிடைக்காதவர்கள்
படிப் படியாகத் தான்
முன்னேற வேண்டியுள்ளது


தூங்கும் பொழுது
நிம்மதியாகவும்
எழுந்திருக்கும் பொழுது
சந்தோஷமாகவும்
இருக்கும் மனிதன் எவரோ
அவரே உலகில்
பணக்கார மனிதன்


வெளியே தெரியும்
தோற்றத்தை வைத்து
யாரையும்
கணித்து விடக்கூடாது
அவரவர் மனதில்
ஆயிரம் எண்ணங்கள்


நல்ல நண்பர்களை அறிய
தொலைந்து தான்
போகனும்னு
அவசியம் இல்லை
கொஞ்ச நாளைக்கு
இந்த பக்கம் வராம
இருந்தா போதும் தானா
தெருஞ்சுரும்


நான்கு நாட்கள்
தொலைந்து பாருங்கள்
ஐந்தாம் நாள் தெரியும்
உங்கள் மதிப்பு


நேரம் தவறாமல்
பேசிய உறவுகள்
அனைத்தும்
பிரிதொரு நாளில்
நேரத்திற்கு தகுந்தாற்போல்
பேச ஆரம்பிக்கும்
என்பதே வாழ்வின் நிதர்சனம்


இன்று எப்படியோ
நாளையும் அப்படித்தான்
நாம் மாறாமல்
எதுவும் மாறாது


சிரித்து கடந்து
செல்லுங்கள்
வாதம் செய்து கூட
புரிய வைக்க முடியாது
என்று தெரிபவர்களிடம்


கடந்து வந்த
வாழ்க்கைப் பாதையில்
கல்லென நினைத்து
வைரங்களையும்
தூக்கி எறிந்திருப்போம்
வைரமென நினைத்து
கற்களையும்
சுமந்து வந்திருப்போம்


மகிழ்ச்சியை
வெளிபடுத்துவதை விட
சோகத்தை மறைப்பதற்க்கே
அதிகம் பயன்படுகிறது
புன்னகை


நம் மீது காட்டப்படும்
கோபங்களில் தான்
நம் மீதான
அக்கறையும் உள்ளது


இலக்கு நோக்கிய
பயணத்தின் பாதை
என்றும் இலகுவாய்
இருப்பதேயில்லை


பிறருடைய மனதை
கவர்வது நம்முடைய
அழகோ அறிவோ அல்ல
நாம் பழகும் விதமும்
பிறரை நாம் மதிக்கும்
விதத்தில்தான் அமையும்


கணக்கு பாடம்
மாதிரி தான்
வாழ்க்கையும்
புரியுற வரைக்கும்
கடுப்பா இருக்கும்
புரிந்த பிறகு
இனிப்பா இருக்கும்


எல்லாம் எனக்கு
தெரியும் என்பவனை விட
எதுவும் எனக்கு
தெரியாதுன்னு சொல்றான்
பாருங்க அவன் தான்
மிகவும் ஆபத்தானவன்


மறுக்கப்பட்ட காதலோ
அல்லது
மறைக்கப்பட்ட காதலோ
ஏதோ ஒன்று நிச்சயம்
பெரும்பாலும்
எல்லோர் மனதிலும் இருக்கும்


எல்லார் மனதிலும்
ஏதோ ஆதங்கம் இருக்கிறது
அதை வெளிப்படுத்தும்
விண்ணப்பங்கள் தான்
படிக்கபடுவதே இல்லை


தேடிச் சென்று
அன்பை நிரூபிக்க
நினைக்காதே
ஆசையாய் போனால்
அவமானம் தான் மிஞ்சும்


சிலரது வரவு வாழ்வை
சிறப்பாக்கும்
சிலரின் வரவோ வாழ்வை
ரணமாக்கும்
அவர்கள் பிரிந்து செல்வதும்
கொண்டாடத்தக்கதே



எங்க போறீங்க இதோ உங்களுக்காக