Here are the Latest Collections of Tamil அழகிய காதல் கவிதைகள் 2019.

Tamil Kadhal Kavithai 2019

காதல் கவிதைகள்

  • தமிழ் காதல் கவிதைகள் SMS
  • Tamil Love SMS
  • Tamil SMS Love Feelings
  • Heart Touching Love SMS in Tamil

Kadhal Kavithaigal 2019

👇👇👇👇👇👇👇


மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை


நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்


தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்


காரணம் கேட்காமலேயே
கண்ணீரின் வலியை
உணர்ந்து கொள்ளும்
துணை கிடைப்பது
வரம்


கண்ணனுக்காக
காத்திருக்கும்
ராதையாய்
உனக்காக நான்
உனைக்காண


காதுக்குள் ரீங்காரமிடும்
உன் குரலொலி
கேட்டு கம்மலும்
தலை கவிழ்ததோ
நாணத்தில்


மனதின்
வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய்
நினைவில்


கண்களோடு நீ
கலந்ததிலிருந்து
காத்திருப்பும்
கடினம் தான்


மல்லிகைக்குள் மறைந்திருந்து
மயக்கும் வாசனையாய்
மனதில் ஒளிந்திருந்து
மயக்குகிறாய் எனை


எழுதிடுவோம்
ஒரு புதுக்கவிதை
விழிகளில் கலந்து
இதயத்தில் நுழைந்து


தோற்று மட்டும் போகவில்லை
தொலைந்தும் போய்விட்டேன்
உன்னொற்றை பார்வையில்


ஒரு முறையேனும்
என் திசை நோக்கு
என் பயணம்
இனிதே நிறைவடையும்


உன் புன்னகை கண்டு
கண் விழிக்கையில்
அன்றைய தினம்
சுகமாய் பிறக்கிறது


உனக்காக நானிருக்கின்றேன்
என்ற உன் வார்த்தையே
நீயில்ல நேரங்களிலும்
வாழ்க்கையை
ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு


இருண்ட வானையும்
அன்னாந்து ரசிக்க வைக்க
அவளால் மட்டுமே சாத்தியம்
(நிலவு மகள்)


விரும்பி கொடுப்பதில்
வாழ்கிறது உன் மீதுள்ள
என் ஆழமான
காதல்


கண்ணாடியில்
எனை ரசிப்பதைவிட
உன் விழிகளுக்குள்
ரசிக்கவே விரும்புது
மனம்


எனைத்தேடி
என்னிடமே தருவாய்
என்ற நம்பிக்கையில்
தெரிந்தே தொலைகிறேன்
உன்னில்


உனைக்காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளித்து கொண்டிருக்கின்றேன்
இதோ வந்திடுவாயென


சிறு சலசலப்பும்
எனை ஏமாற்றுகிறது
உன் வருகையோயென
நினைக்க வைத்து


இவ்வுலகில் எனக்காக
ஒரு அழகிய
கனவை தந்தது
உன் அன்பு


மழைத்துளி எண்ணிக்கையிலும்
அலை கரை மோதும்
எண்ணிக்கையிலும்
என் இதயத்துடிப்பின்
எண்ணிக்கையிலும்.
உன்னிடம் காதல் சொன்னேன்


நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்


மொட்டில்லா
மெட்டியிலும் மெல்லிசை
உன் கரம்
பட்டதால்


புரியாத போதும்
ரசிக்க தூண்டும்
கவிதையாய் தூண்டுகிறாய்
மனதை
பார்வையில் பேசி


காலமும்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
தூரத்தில்
உன்னை வைத்து
என் மனதோடு


மரணமும் வரமே
உன் தோளில்
சாய்ந்திருக்க
எனை தழுவிக்கொண்டால்


விரல்கள் வீணையில்
விளையாடினாலும்
என்னிதய வீணை
மீட்டுவது
உனை தான்


சுமக்கின்றேன் என்று
அதிக வலிகளை
கொடுக்காதே
உடைந்திடும் என்னிதயம்


குளிர் வாடையாய்
உன் பார்வை வீச
போர்த்தி கொள்கிறது
வார்த்தைகளும் மௌனமாய்


விடுமுறை நாளென்ற
மகிழ்வைவிட நீ
அருகிலிருக்கின்றாய்
என்ற சந்தோஷம்
தான் அதிகம்
மனதில்


எண்ண ஏட்டின்
ஆசைகளை
கன்ன ஏட்டில்
பதித்தேன்
இதழ் கவிதைகளாக


ஆணிவேராய்
நீயிருப்பதால்
அழகான மலராய்
வாசம் வீசுகிறேன்
இம்மண்ணில்


யாரின் இடத்தை
யார் நிரப்பினாலும்
எனக்கான
உன்னிடத்தை
யாராலும்
நிரப்பிட முடியாது
அன்பில்


நான்
சரியா தவறா
தெரியாதென்றாலும்
எனக்காக எப்போதும்
நீயிருப்பாய்
என்று மட்டும்
தெரியும்


சிந்தனையிலும்
நீயே
சிறகடிக்கின்றாய்
வண்ண கனவுகளோடு
வண்ணத்து பூச்சாகுது
மனமும்


தொடுக்கின்றாய் அழகாய்
தொடுத்திரையில்
வார்த்தைகளை
தொற்றி கொல்(ள்)கிறது
நாணமும்
நீ தொடாமலேயே


எழுத்தில் இருக்கும்
என்னையும்
மனதில் இருக்கும்
உன்னையும்
வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு என்பது
பெரும்பாலும்
மௌனத்திலேயே விடைபெறுகிறது


அலையாய் வீசும்
உன்னன்பில்
மிதக்கின்றேன்
காகித கப்பலாய்
சந்தோஷ கடலில்


மன கிளையில்
படர்கிறாய்
கொடியாக
உள்ளமும் அசைந்தாடுது
ஊஞ்சலாய்


சொப்பனம் காண
பிடிக்கவில்லை
நீ சொற்ப நேரத்தில்
கலைந்திடுவதால்
கற்பனையோடு
காத்திருக்கிறேன்
நித்திரை தொலைத்து
உன் முகம் காண


நானும் கூட
கவிதை எழுதுகிறேன்
உனக்காக அல்ல
உன்னால்


காண துடிப்பது
விழி உனையென்றால்
காலமெல்லாம் காத்திருப்பேன்


நீ பேசும்
மொழியிடம்
ஜெயித்து விட்டாலும்
உன் பேசா
மொழியிடம்
தோற்றுத்தான்
போகிறேன் நானும்


நிலவோடு
போட்டியிடுகிறது
மனம்
சலிக்காமல்
காத்திருப்பதில்
உனக்காக


உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்டாலும்
காட்டி கொடுக்கிறது
நாணம் நானும்
உன் நினைவில்
மூழ்கி கொண்டிருப்பதை


நிலையான மனம்தான்
இன்று நிலைக்கொள்ளாது
தடுமாறுகிறது
உன்னில் சுழன்று


சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது


நித்தமும் எனக்காகவே
காத்திருக்கும் ஒற்றை
பேரழகி அவள்


ஆசையாய்
அலங்கரித்து கொண்டாலும்
நீ ரசிப்பதை
காணும் தைரியம்
இன்னுமென்
விழிகளுக்கு இல்லை


பக்கம் பக்கமாய்
வர்ணிக்கின்றான்
உன் வெட்கமும்
அழகிய கவிதைத்தான்
என்று


தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்


கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்


வானத்தில் மட்டுமின்றி
எந்தன் கவியிலும்
நித்தமும் ஒளி வீசும்
ஒற்றை பேரழகி அவள்


உனக்கென்ன நிமிடத்தில்
வந்துவிடுவேன்
என்கின்றாய்
எனக்கல்லவோ
நகர்கிறது
யுகமாய் நொடியும்


எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தும்
உன்னிடமே மயங்குகிறேன்
மாயம் செய்ததென்னவோ


உன்
துடிக்கும் இதயமும்
தவிக்கும் நினைப்பும்
எனக்காகவே
இருக்க வேண்டும்


யாரோடும்
பயணிக்க பிடிக்கவில்லை
நம் நினைவோடு
பயணிக்க பிடித்திருப்பதால்


இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து


நெற்றியில் பொட்டிட்டு
கொள்ளும் போதெல்லாம்
உன் இதழிட்ட
திலகம்
பௌர்ணமியாய்
ஒளிர்கிறது மனதில்


இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும் இல்லை


உள்ளங்கையில்
வெப்பம் ஏற்றுகிறாய்
மெல்ல குளிருது
உள்ளமும்


கைகளில்
கனஏட்டை தாங்கியிருந்தாலும்
என் மன ஏடு
ஏந்தியிருப்பது உனையே


வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய்
கிறுக்கி கொண்டிருந்த
எனையும் ரசனையாய்
எழுத வைத்தது நீ
என்மீது கொண்ட
காதல்


இமைகள் கொண்டு
சிறை பிடித்து
விட்டேன் உனை
கனவு கலைந்தாலும்
நீ கண்களிலிருந்து
தப்பிவிடாதிருக்க


எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி


துளையில்லா
மூங்கில் மரங்களிலும்
புல்லாங்குழலின் இசை
உன் நினைவுகள் தீண்ட


ஒருவரில் ஒருவர்
நாம் தொலைந்த
இந்நிமிடங்கள்
தொடர்ந்திட வேண்டும்
தொலையாமல்


சொல்லாத காதலாய்
மனம் கொல்லாமல்
கொல்லுது
நீ இல்லாத போது
ஏதேதோ
சொல்ல நினைத்து உன்னிடம்


சத்தமின்றி நடந்தாலும்
நித்தம் இம்சிக்கின்றதே
மாட்டி சென்றாயா
மனதை கொலுசில்
உனையே நினைத்திருக்க


எனது
ஆயுள்ரேகையில்
மறைந்திருப்பதென்னவோ
உனது அன்புமட்டுமே


உன்னுலகுக்குள் எனையும்
அழைத்து செல்லும்
வித்தையேதும்
வைத்திருக்கின்றாய
மூச்சு காற்றில்
உன்னருகில் என்னுலகமும்
மறக்குதே எனக்கு


ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்


காற்றோடு கலந்து
காதலாகி கவியெழுத
தூண்டுகிறாய் எனையும்
தென்றலாக
நீ மோதி


சாய்ந்து கொள்ளும்
இடமெல்லாம்
உன் தோளின் மென்மை
நினைவெல்லாம் நீயாகி


மரணிக்கும் மலராய்
இருக்கும் எனக்கும்
தினமும் ஜனனத்தை
கொடுத்து கொண்டிருக்கிறாய்
அன்பில்


நெருக்கத்தின் நேசம்
இன்னும் பலநூறு
ஆண்டுகள் வாழ்ந்திடும்
ஆசையை தூண்டுது


இன்றுவரை
நான் எழுதி
முற்றுப்பெறாத
ஒரே கவிதை
உன் பெயர் மட்டுமே


காத்திருந்த தவிப்பெல்லாம்
காதலாகி கண்களையும்
மறைக்குது நாணம்
நீ கண்ணெதிரே வர


இருண்ட வான வீதியில்
அலங்கரிக்கப்பட்ட
தனிமையின்
தேவதை அவள்


இருளை பூசிக்கொள்ளும்
இரவாய்
மனதை சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் நீ


ஏதேதோ எண்ணங்கள்
நெஞ்சில் அலையாய்
எதுவும் விளங்காமல்
புன்னகைக்கிறேன்
வழிமாறும் பயணங்களில்
விழிமாறும் நிமிடங்கள்


நீயின்றி
நகர்ந்ததுண்டு
நாட்கள்
உன் நினைவின்றி
நகர்ந்ததில்லை
என் நாட்கள்


வானில்
நிலவில்லாத நாட்கள்
கூட உண்டு
என்னுள்
நின் நினைவில்லாத
நாட்கள் என்பதே இராது


உறங்கி கிடக்கும்
கண்களுக்குள்
கிறங்கி கிடக்கு
உன் நினைவு
உறங்காமல்


எனை தனிமைபடுத்த
கூடாதென நினைக்கும்
ஒரே ஜீவன்
உன் நினைவுதான்
நீயில்லாதபோது
ஓடோடி வந்து
விடுகிறது


கண்ணால் பேசியே
கற்று கொடுத்தாய்
என் கண்களுக்கும்
காதலிக்க


எட்டா தூரத்தில்
நீயென்றாலும்
உனை எட்டி
விடுகிறேன்
கற்பனையில்
உன்னருகில்


உன் காதலில் கரைகிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்
மொத்தத்தில்
உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்


உன் பார்வை
எனை தீண்டாதெனில்
என்னுள்ளமும்
ஒளியிழந்த விளக்கே


ஏதோ
யோசிக்க நினைத்து
உன்னை (சு)வாசித்து
கொண்டிருக்கின்றேன்


யாவும் வெறுமையென
வெறித்திருந்த பார்வையும்
ஜீவன் பெற்றது
உன்னால்


சத்தமின்றி விளையாடும்
உன் நினைவில்
நித்தம் சிறைப்பட்டுபோகுது
மனம் சுகமான கைதியாய்


சொல்லவந்ததை
சொல்ல முடியாமல்
போவதிலிருந்தே
துவங்குகிறது காதல்


கண்ணோடு
நீ கலந்ததிலிருந்து
கண்களும் அடிக்கடி
ரசிக்குது
கண்ணாடியில் என்னை


என் அமைதிக்குள்
ஆழ்ந்திருப்பது நீயே


நிழலுக்கு
குடை பிடிக்கிறேன்
நீயில்லா இரவின்
தனிமையில்


எண்ணற்ற கவிதைகள்
ஏட்டில் எழுதினாலும்
உனக்காக மையில்
கலந்து விழியிலொரு
கவிதை நீ ரசிக்க


நிஜமாய்
முன் செல்கிறேன்
நிழலாய்
பின் தொடர்ந்து வா
இடைவெளிகள் நம்மை
இணைத்தே வைக்கும்


காத்திருந்த
ரணமெல்லாம்
காணாமல் போனது
உன்னன்பின் கதகதப்பில்


புயல் பார்வையில்
சாய்ப்பதும் ஏனடா
உன் தென்றல்
பார்வையே போதுமே
நான் வீழ்ந்திட


கனவுகளோடு காத்திருக்கும்
கண்களுக்கு காட்சி
தருவாயோ
இல்லை கண்மையை
கரைப்பாயோ


தூறலின்றி
நனைக்கின்றாய்
நினைவு தூறலில்
மனதை


கண்களில் தேங்கிக்கிடக்கும்
காதலை
இதழ்களில் உதிர்துவிடு
என்னிதயமும்
கொஞ்சம்
உயிர் வாழட்டும்


உன்னை தாண்டி
எதுவுமில்லை
என் சந்தோஷத்தின்
எல்லை


அழைப்பை நீ யெடுக்க
தாமதித்தால் துடிக்குது
அதிகமாய் மனமும்
என்னவோ ஏதோவென்று


என்னுள்
நீயே முழுதும்
வியாபித்திருப்பதால்
வேறெதற்கும் இடமில்லை
மனதில்


மேடு பள்ளமென
சந்தித்தாலும்
அழகாய் ஓடும்
நதியாய்
என் மனமும்
நீந்துகிறது உன்னில்


மூச்சு காற்றின்
வெப்பத்தில்
மூட்டுகிறாய்
ஆசை தீயை


உன் தொல்லைகளும்
இன்பம் தான்
நீயில்லா பொழுதுகளில்
எனை சீண்டும்
போது


பலருடனும் வார்த்தைகள்
பரிமாறி கொண்டாலும்
ஒரு நொடி
வந்து போகும்
உன் நினைவுக்கு
இணையில்லை
எதுவும்


வண்ணங்கள் யாவும்
வெறுமையாகிறது
நீ வானவில்லாய்
மறையும் போது


என்னுள்ளும் வசந்தம்
நீ வாழ்வில்
வந்த பின்னே


நிமிடங்களென்ன
நீண்ட காலமென்றாலும்
காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன்
நீள்வது உன்னினைவென்றால்
உனக்காக


நேற்று பார்த்த
எதுவும் இன்று
புதிதாயில்லை
உன்னைத்தவிர


எங்க போறீங்க இதோ உங்களுக்காக