Here are the Latest Collections of Love Status and Quotes in Tamil.

Love Status and Quotes for Whatsapp and instagram Status

Kadhal Status

Love Status

👇👇👇👇👇👇👇


நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே


கையளவு இதயத்தில்
கடலளவு காதலை
நிரப்பி மூழ்கடிக்கிறாய்
அன்பில் அன்பே


தொலைதூர நிலவாய்
நீ துரத்தும் மேகமாய்
உன் நினைவில் நான்


காற்றின் தீண்டலோடு
போட்டியிடும்
உன் மூச்சின் தீண்டலில்
தோற்று கொண்டிருக்கிறேன்
நான்


(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்


ஆழுறக்கமோ மீளாதுயிலோ
உன் கரங்களுக்குள்ளேயே
அடங்கிட வேண்டும்


தென்றலும் சுடுகிறது
உனை தீண்டாத காற்று
எனை தீண்டியதாலா


மையில்லா
உன் கிறுக்கலில்
பொய்யாய்
ஒரு கவிதையை
ரசித்தே கிறங்குது
மனமும்


அரை நொடி
வந்தாலும்
அருவியாய்
கொட்டி செல்கிறாய்
அன்பை அன்பே


விலங்காக பூட்டிக்கொள்
விலகாமல் இருப்பேன்
உன்னிதய சிறைக்குள்
காலமெல்லாம் காதலோடு


இம்சையான இன்பம்
உன் அமைதி
ஆழ் மனதுவரை
பேரிரைச்சலாய்
ஏதேதோ பேசி
கொல்கிறது


நேசமெல்லாம் வரிகளில்
நீயும் வா(நே)சிப்பாய்
என்றே


மனதை கொள்ளையடித்து
தண்டனையையும்
எனக்கே கொடுக்கிறாய்
நினைவு சிறைக்குள்
தள்ளி


காதலே இல்லாத
கவிதையை காதலிக்கிறேன்
நீ காதலோடு எழுதியதால்


பார்வைக்கு
எட்டாத தூரத்தில்
நீயென்ற கவலையில்லை
மனம் தொட்டு
பேசும் அருகில்
இருப்பதால் நீ


தேடவில்லை
உனை தொலைவது
நானென்பதால் உன்னில்


நீ இல்லையென்று
தெரிந்தும்
ஏதோவொரு நற்பாசை
எதிர்படமாட்டாயோ
என்று விழிகளுக்கு


புதிதாய் ஏதுமில்லை
பேசிய அதே வார்த்தைகள்
மீண்டும் மீண்டும்
புதிதாய் ரசிக்க
தோணுதே
உன்னிதழ் உதிர்ப்பதாலா


பற்றி கொண்டாய்
கரத்தை
பத்தி கொண்டது
காதல் தீ
பார்வைகளின் உரசலில்


சிலமுறை சண்டை
பலமுறை சமாதானம்
மீண்டும் புதிதாய்
காதலென்றே
நிறைவடைகிறது
நம் உரையாடல்
அடுத்து
எப்போதழைப்பாய்
என்ற ஏக்கத்துடனேயே


உன் பக்கங்களை
வாசித்து
என் பக்கங்களை
தொலைத்து
விட்டேன்
நான் நீயாகி


அன்பே என்றாலே
அது நீயென்றாகி
போனது
என் பேரன்பே


மெல்ல மெல்ல
பறிபோகுது மனம்
நீயெனை கொள்ளையடித்த
தருணங்களில்


விழித்ததும்
விழியோரம்
நீ என்
விடியலாய்


நீ வரும்
வழியில்
விழி நொடியும்
யுகமாய் நகர்கிறதே


எங்கோ இருக்கிறாய்
இங்கே கட்டுப்பட்டு
கிடக்கு மனம்
உனதன்பில்


தொடு திரையிலோ
தொடும் தூரத்திலோ
என் எதிர்பார்ப்பு
நீ மட்டுமே


என் வசந்தம்
காலத்தில் இல்லை
உன் காதலில்
அன்பே


காற்றோடு உளறாதே
காதோரம் இசைக்கிறது
உன் காதல் மொழி


காதலிக்க படுவதும்
வரமே
நீயென் வரம்


மௌனம் பிடிக்கும்
உன் வார்தைகளின்
வசீகரத்தில் தொலைந்து
எனை மறந்து
கேட்டு கொண்டிருக்க


எனை ரசிக்க
நினைத்தால்
நீ முந்தி
கொ(ல்)ள்கிறாய்
நினைவாக நானே
உன் ரசனையென்று


பிரித்தெடுக்க முடியாத
சிக்கலாய் சிக்கிக்கொள்ள
பிடிக்கும்
உனதன்பில் அன்பே


விடிந்த பின்னும்
மறையாத நிலவாக
மன வானில்
உலாவுகிறது
இரவின்
நினைவு துளிகள்


சட்டென்று
ஒரு கவிதை
கன்ன ஏட்டில்
ரசிப்பதா ருசிப்பதா
மெய்மறந்து நான்


கொட்டி தருகிறாய்
நேசத்தை
அள்ளி கொள்ள தான்
ஆயுள் போதவில்லை


மனம் பாரமாகும்
போதெல்லாம்
ஏந்தி கொள்கிறாய்
மடியில்
மன சுமைகளை
நீ தாங்கி கொண்டு


நிறை குடமும்
தளும்புது
கண்கள் உனை காண
மனமும் தள்ளாட காதலில்


நீயறியாமல்
உனை சு(வா)சிப்பதும்
ஒரு சுகம் தான்
காதல் கணவா


அணைத்து கொ(ல்)ள்ளும்
நினைவுகளை விரட்டியடிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
தட்டி தொலைக்குது மனதை
நீயில்லா பொழுதுகளில்


எந்த பக்கத்தை
புரட்டினாலும்
உந்தன் ஞாபகமே
மன ஏட்டில்


தனிமை பிடிக்கும்
நமக்கான உலகில்
சிறகடித்து பறப்பதால்
மனம்


மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று


யுத்த களத்தில்
எல்லை மீறாதவன்
தடுத்தும் மீறுகிறான்
எல்லை முத்த களத்தில்


நீ காதோடு
கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்
எல்லாம் மனதை
ரகசியமாய் அலங்கரிக்குது
தனித்திருக்கும் தருணங்களில்


ஆதவன் பார்வையில்
மலரும் தாமரையாய்
உனதன்பின் ஒளியில்
மகிழ்வாய் மலருது
மனம் எனதன்பே


உன் கள்ள சிரிப்பில்
கொள்ளை போகுது
மனம் கள்வனே


கூந்தலை அலங்கரிக்கிறாய்
பூக்களில் மனமோ
கோர்க்குது ஆசைகளை
மாலையாய் நாம் சூடிக்கொள்ள


மகிழ்வாய் நீளும்
நம் பயணத்தில்
எப்போதும்
என் பாதை
நீயே அன்பே


ஆசைகளை துறக்க
நினைத்தால்
மொத்த ஆசைகளின்
உருவமாய்
நீ சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் மனதில்


காற்று தீண்ட
சாயும் நாணலாய்
சாய்கிறேன் நானும்
உன் கண்கள்
காதலாய் தீண்ட
நாணத்தில்


பல முறை
தோற்று போனது பிரிவு
நம் பிரியத்திடம்
நம்மை பிரிக்க நினைத்து


கொடுத்து
செல்கிறேன்
இதயத்தை
எடுத்து வா
காதலிருந்தால்
என் மீது


நாசிக்குள் நுழைந்து
உயிர்வரை சென்று
நேச உறவாடும்
உன் (சு)வாசத்தை
போல் எதுவும் போதை
தருவதில்லை எனக்கு


மணிக்கணக்காய்
பேச வேண்டும்
என்ற எண்ணமில்லை
நீ பேசினால்
மணித்தியாலங்கள்
கரைவது கூட
தெரிவதில்லை


திரும்பி பார்ப்பதும்
விரும்பி கேட்பதும்
உன் பெயர்
ஒலிக்கும் போதே


காற்றுக்கும்
வழி விடாதே
கலைத்து விடும்
காதலை
பற்றிக்கொள் இறுக


கண்களில்
காதலை கலந்து
பார்வையால்
ஏற்றிய ஜோதி
அணையாது
ஆடிக்காற்றிலும்
நீ அணைக்காமல்


மொழியில்லா
ஒரு தாலாட்டு
உன்னிதழின் முத்தம்


ஒரு கணம் அருகில்
மறு கணம் தொலைவில்
நீயும் என்ன பொய்மானா


வென்று விடு
இல்லையேல்
எனை
கொன்று விடு
காதல் களத்தில்


குளிர்கிறது மனம்
உன் அன்பின்
போர்வைக்குள்


விடிந்த பின்னும்
கண்களில் கலையாமல்
நீ கனவுலகில் நான்


மர நிழலில்
இளைப்பாறிய
தருணங்கள்
மனதை வருட
உள்ளமும் ஏங்குது
தலைசாய
உன் தோள்மீது


இடம் மாறிய
பின்னே இதயமும்
சீராய் துடிக்குது
உன் பெயரை சொல்லி


உன் மார்பில்
சாய்ந்ததும்
உறக்கமும்
தழுவி கொள்கிறது
மனதிலும்
நீ எனை மட்டுமே
சுமக்கின்றாய்
என்ற நம்பிக்கையில்


யாசகமும் ஏனடா
யோசிக்காமல் தருவேனே
என் சுவாசத்தையும் கூட
ஏந்தி கொள்வது
நீயென்றால்


இல்லாத பருக்களும்
முகத்தில் அவ்வப்போது
எட்டி பார்க்குது
வெட்க துளிகளாய்
உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்ட போதும்
உனை காணும் ஆசையில்


உன் தித்திக்கும்
காதல் பார்வையில்
காப்பியாய் இனிக்கிறது
கசாயமும்


வலிகளில் மீட்டு
வழிகளாகிறாய்
நம்பிக்கையை
கொடுத்து


நீ விட்டுச் சென்ற
இடத்திலிருந்தே
விடாமல்
துரத்துகின்றன
உன் நினைவுகள்


காதலோ
மன காயமோ
மருந்து நீயாகவே
இருக்க வேண்டும்


நாணத்தில்
தலை சாய்கிறது
மயிலிறகு மெல்ல
நீ மனதை வருட
நினைவால்


கோர்த்த ஆசைகள்
மனதில்
உதிரா மல்லிகையாய்
உன்னோடு
சூடி கொள்ள


எட்டி
நீ போனாலும்
நித்தம் மனதை
கொல்லுது
கொலுசொலி
உன் நினைவு
சின்னமாய்


கண்களுக்கும்
சிவ ராத்திரி
உன் மௌனத்தால்


போதும் போதும்
என்றளவுக்கு
நீ அள்ளி
கொடுத்தாலும்
இன்னுமின்னும்
வேண்டும் வேண்டும்
என்றே ஏங்குது
மனம் காதலை உன்னிடம்


அலங்கோலம்
தான் பிடிக்கும் போல்
உன் கண்களுக்கு
அடிக்கடி கலைத்து
ரசிக்கின்றாயே
கூந்தலை


முற்று புள்ளியும்
தொடர் புள்ளியானது
உன் மிஸ் யு வில்


விழி காணும்
பிம்பம் நீயென்றால்
இமைக்காமல்
ரசித்திருப்பேன்


கிறுக்கலில் கூட
உன் பெயரின்
முதலெழுத்தை தான்
விரல்களும் கோலமிடுகிறது


நிழலாய் நீ
தொடர்ந்தால்
ஒளியாய் நானிருப்பேன்


நீ சென்ற
பின்னும்
ஓடி திரிகிறது
அங்குமிங்கும்
குறும்பு
குழந்தையாய்
மன அறைக்குள்
உன் நினைவுகள்
சுகமான இம்சயாய்


ஆடிப்பெருக்காய்
ஊற்றெடுக்கும்
உன் நினைவில்
மனமும்
சற்று தள்ளாடி
தான் போகிறது


வாசிக்க நீயில்லாததால்
யோசித்தும்
வர வில்லை கவிதை


எத்தனை புயலடித்தாலும்
இதய கதவை எனக்காக
திறந்தே வைத்திருக்கிறாய்
என் மனமறிந்து


நனைப்பது மழை
துளியென்றாலும்
நான் நனைவது
நம் நினைவு
துளிகளில்
குடையிருந்தும்
நனைந்த


விட்டு விட்டு
துடிக்கும்
இடை வெளியையும்
நிரப்பி விடுகிறாய்
அன்பின் நேசத்தால்
இதயத்தை


சோம்பல் முறிக்க
எழும் புத்துணர்ச்சியாய்
உன் நினைவு
தொற்றி கொள்ள
மனமும்


உனக்கு
நான் மறைந்து
போ(ன)கும்
நிழலாக இருக்கலாம்
ஆனால்
எனக்குள் நீ
எப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
நிஜம்


மனம் நினைத்த
வேண்டுதலும்
மறந்தே போனது
நீ காட்சியளிக்க
கண்களுக்கு


கோர்த்து வைத்த
வார்த்தைகளை
சேர்த்திட துணிவில்லை
உன் கண்கள் பேச


உன்னில்
தொலைந்ததிலிருந்து
என்னை ரசிக்கின்றேன்
எனக்கும் எனை
பிடித்து போக


வாழ்க்கை என்று
ரசித்த உன் வரிகளெல்லாம்
எனை வதம் செய்கிறது
வெறும் வார்த்தை என்று
நீயெனக்கு உணர்த்த


பருகாமலேயே சுவைக்கிறது
உன்னிதழ் பட்ட தேனீர்
எனையும் ருசிக்க தூண்டி
தித்திக்கும்
உன் நினைவுகளோடு


இமை கதவுகள்
உனக்காக திறந்தேயுள்ளது
விழி வீட்டினுள்
நுழைந்துவிடு
கனவு சாலையில்
நாம் இணைந்தே
பயணிக்கலாம்


குடையிருந்தும்
நனைகிறேன்
காதலின் சாரலில்
சுகமாய்


நினைவோ
நிஜமோ
நீயே
என்னுலகம்


குடிசையில் வாழ்ந்தாலும்
உன் மன மாளிகையில்
அரசி நானே


வெண்ணை திருடும்
கண்ணனாய்
மனதை
திருடி கொண்டாய்


கால்கள் தடுமாற
கால் கொலுசும்
கவிதை பாடுது
உன் நினைவு
போதையில்
தள்ளாடி


இணைத்து கொண்ட
கரங்களை நினைத்து
ரசிக்கிறேன்
நீயில்லா பொழுதுகளில்
உனை மனதில் அணைத்து


படிக்கும் எதுவும்
பதிய வில்லை
மனதில் கண்கள்
உனையே வாசிப்பதால்


கண்கள் காணாத
போதும்
சுகமாய் தீண்டும்
காற்றாய் மனதை
தீண்டி செல்கிறாய்
காதலால் இதமாய்


பலரின் கண்கள்
உன்னையும் ரசிக்கலாம்
ஆனால்
என் விழிகளுக்கோ
உனை மட்டுமே
ரசிக்க பிடிக்கும்
கிருஷ்ணனின்
ராதையாய்


எனையுன்
இதய சிறைக்குள்
அடைத்து விட்டு
சுதந்திரமாயிரு என்கிறாய்


உன் விழிகளெனை
நேசித்தால்
என் விரல்களும்
வாசிக்கும் காதலிசை


என் தனிமையின்
அமைதியில்
பேரிரைச்சலாய்
உன் மௌனம்
சத்தமின்றி மனதில்
யுத்தம் செய்கிறது


மறைந்திருந்து கேட்டாலும்
மனதை மயக்கும்
இசையாய்
என்னை மயக்குகிறாய்
ரசிக்க வைத்தே உனை


நீயெனை
ஏந்தி கொள்வதாலேயே
தாங்கி கொள்கிறேன்
வலிகளையும்
சுகமாய் என்னவனே


ஏமாற்றம்
என்று தெரிந்தும்
மனம்
எதிர் பார்ப்போடு
காத்திருக்கு
உனை
நீ வருவாயென்றே


உன் இதழ்கள்
பேசுவதை விட
அதிகம் பேசுகிறது
உன் கண்கள்


ரசிப்பதனைத்தின்
ரசனையாய்
நீயே கலந்துள்ளாய்
என்னுயிரே


உன் வெற்றிடத்தை
நிரப்பி கொள்கிறேன்
நம் நினைவை
கொண்டு
நீயில்லா பொழுதுகளில்


உன் வரவின்
தாமதத்தை
நகர்த்தி கொண்டிருக்கிறேன்
ஏதோவொரு தேடுதலில்
உனில் தொலைந்தே


என் தனிமையை
ஆள்கிறாய்
உன் நினைவெனும்
சாம்ராஜ்யத்தால்


ஏட்டில்
பலவரி கவிதை
கிறுக்கினாலும்
எப்போதும்
பிடிக்கும் நெற்றியேட்டில்
என்னவன் கிறுக்கும்
இருவரி கவிதை


உன் முகம்
காணாவிடின்
என் மனமும்
தேய்பிறையே


உன் விழியில்
கற்று கொண்டதை
என் விழியால்
கடத்துகிறேன்
மீட்டு கொள்
விழிகளால் மீண்டும்
நான் கற்று கொள்ள
உன் விழி கவிதைகளை


நீரில் மாட்டி
கொண்ட இலையாய்
சிக்கி தவிக்கிறேன்
உன் காதலெனும் நதியில்
தத்தளித்த போதும் சுகமாய்


தீண்டி சென்றாய்
மென்னிதழால்
கன்னத்தை
தீரவில்லை போதை
இன்னும் எண்ணத்தில்


நீ காவலா காதலா
அறியாத போதும்
அழகாய் தொடர்கிறது
பயணம்
முடிவில்லா
மன பாதையில்


நித்தம்
ஒரு யுத்தம்
காதலெனும்
ஊஞ்சலில்
உன் நினைவு
தாலாட்ட
மனமும் தள்ளாடியே


சரியானதும்
பிழையாகாதா
என்றேங்குது மனம்
உன் திருத்தத்திற்காகவே


என் நெடுநாள்
ஆசையை
திடிரென நிறைவேற்றியது
காலமும் நம்மை
காதல் மழையில்
நனைத்து


உன் மௌனத்திற்கு
இத்தனை வலிமையா
அத்தனை உணர்வுகளையும்
தூக்கியெறிய
துணியிதே மனம்


ஓசை வேண்டாம்
பாஷை வேண்டாம்.
இப்படியே இருந்துவிடேன்
உன் விழி தீண்டலில்
கொண்டாடிட
ஓய்வுநாளை நானும்


மாலை என்றாலே
கோர்வையாய்
மனதை மயக்குது
உன் வார்த்தைகள்
எனை சூடிக்கொள்
என்று மாலையாய்


திடீர் மழையாய்
நீயும் அவ்வப்போது
நனைக்கிறாய்
காதல் மழையில்
கன்னத்தை தீண்டி


விழிகளால்
கட்டி போட்டு
விலகிடாதே
என்கிறாய்


குடையோடு
பயணித்தாலும்
நிழல் தருவது நீயே
என் மனதுக்கும்
நினைவாக தொடர்ந்து


அணைப்பது
யாரென்ற
சிந்தனையிலேயே
கரைகிறது
இரவும் மெழுகாய்


நகர்ந்திடாதே
நீயும் சற்று
உறங்கி கொள்கிறேன்
நானும்
உன் விரல்களின்
பிடிக்குள்


உன் கரம்பற்றி
நடக்கையில்
நானும் வழியறியா
குழந்தை தான்


எனக்காக
நீ இருக்கும் வரை
நமக்கான வாழ்வு
என்றும் அழகே


அதே அன்பு
அக்கறை
தவிப்பு துடிப்பு
அன்று முதல்
இன்று வரை
சற்றும் மாற்றமில்லாது
உன்னால் மட்டும்
எப்படி சாத்தியமென்று
பிரமித்து போகிறேன்
நானும் என்னவனே


உன்னிடம்
கற்று கொண்டதை
கற்று தெளிகிறேன்
இப்படி
வெட்க படுகிறாயே
காதல் கணவா


நீயோ பாதத்தை
அலங்கரிக்க
பரிசளித்தாய்
நானோ அலங்கரித்து
கொண்டேன் இதயத்தை
உன் நினைவுகளை
கோர்த்து சிலம்போடு


காட்சி பிழையென்றாலும்
ரசிக்க தவறவில்லை
விழிகள்
கடந்து போவது
உன் சாயல்
பிம்பம் என்பதால்


மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை


உன் வலியால்
என் விழிகள்


என்
இதய துடிப்பில்
ஒலிக்கும்
உன் பெயரின்
ஓசையைவிட
அழகிய இன்னிசை
எதுவுமில்லை என்னுயிரே


அழகிய தீயும் நீ
ஆபத்தான திமிரும் நீ
எனைக் கொல்லும்


உன் வருகைக்கு
முன்னே உனை
முந்தி கொ(ல்)ள்கிறது
உன் நினைவு
என் ஆவலை
தூண்டியே


உன் உளறல்கள்
உணர்ந்தும் உணறாமல்
அறிந்தும் அறியாமல்
இந்த கண்ணாமூச்சி
விளையாட்டும் காதலில்
அழகிய அவஸ்த்தை தான்


உன் தரிசனத்துக்காகவே
விரைந்தோடுது மனம்


நீ கெஞ்சும் போது
மிஞ்சினாலும்
உனை கொஞ்ச
தவறியதில்லை
சிறு குழந்தையாய்


நிலையில்லா
நொடிகளென்றாலும்
தித்திக்குது மனதில்
தேனீராய் நீ


ஓய்ந்திருந்தாலும்
சீண்டி செல்கிறாய்
நினைவால் மயிலிறகாய்


இத்தனை அராஜகம்
எதற்கு அன்பாய்
ஒரு பார்வையை
வீசியிருந்தாலே
அடிமையாய்
வீழ்ந்து கிடப்பேனே
உன்னிடத்தில்


கண்ணாடியில்
உனை ரசிக்கும்
தைரியம் ஏனோ
உன் முன்னாடி
இல்லை
என் கண்களுக்கு


பிடித்து அணியவில்லை
உனை பிடித்ததால்
அணிகிறேன்.
நீ காதலோடு கொடுத்த
கால் கொலுசை


உள்ளங்கையில்
தாங்குவதை விட
நீ எனை உள்ளத்தில்
ஏந்திக்கொள்
மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ளவரை


கலைத்து விடாதே
மௌனத்தை
கொஞ்சம்
ரசித்து கொள்கிறேன்
உன்னை


கனவிலும்
ஓர் அழகிய கவிதை
வாசிக்க வாசிக்க
ரசனையாய் நீ


ஏதேதோ
பேச நினைத்து
மனம் இப்படியே
பார்த்து கொண்டிருந்தால்
போதுமென்று
லயித்துவிட்டது உன்னில்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக